Skip to main content

கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா..! (படங்கள்)

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

 

இந்திய நாட்டின் 71- வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் அந்தந்த மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். 
 

அதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால், துணை சபாநாயர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் தமிழக டிஜிபி திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்துக்கொண்டனர். 
 

தேசியக் கொடியேற்றி வைத்த ஆளுநர் முப்படை அணி வகுப்பு, காவல்துறை, என்சிசி என 48 படை பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகளும் இடம் பெற்றது. விழாவில் காவலர் பதக்கம், அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான விருது, வேளாண் துறையின் சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக ஊர்தி நிராகரிப்பு... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முகமூடி அணிந்து பேரணி!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

Tamil Nadu vehicle rejection ... Indian Democratic Youth Association rally wearing a mask!

 

சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள் ஆகியோர் உருவம் பொறித்த ஊர்தியை அனுமதிக்காததைக் கண்டித்து மேலவீதி கஞ்சித்தொட்டி முனையிலிருந்து அண்ணா சிலை வரை சுதந்திரப் போராட்ட வீரர்களின் முக உருவம் பொறித்த முகமூடியை அணிந்து மேலவீதி பெரியார் சிலையிலிருந்து அண்ணா சிலைவரை ஊர்வலமாகச் சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல், வாலிபர் சங்க கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் சதிஷ் , சிதம்பரம் நகர செயலாளர் கோபால், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கவியரசன், மாவட்ட குழு உறுப்பினர் பிரதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் லெனின், துணைத்தலைவர் ஆகாஷ் பரங்கிப்பேட்டை ஒன்றிய பொருளாளர் அருள்தீபன், கீரப்பாளையம் ஒன்றிய பொருளாளர் சூர்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

 

struggle

 

முன்னதாக கஞ்சித் தொட்டி முனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் கட்சியின் மூத்த உறுப்பினர் மூசா, நகர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

குடியரசுக் கட்சியின் ஒரு ஓட்டு; வரலாறு படைக்கப்போகும் இந்திய வம்சாவளிப் பெண்! 

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

vanita gupta

 

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அவர், பல்வேறு பொறுப்புகளுக்கு அதிகாரிகளைப் பரிந்துரைத்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

 

அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வனிதா குப்தாவை, ஜோ பைடன் இணை அட்டர்னி ஜெனரல் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தார். அதிபரின் பரிந்துரையை, அமெரிக்காவின் செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் பரிந்துரை தோல்வியில் முடியும் என்ற நிலையில், அதற்கான வாக்கெடுப்பு செனட்டில் நடைபெற்றது.

 

அமெரிக்க செனட்டில் குடியரசுக் கட்சி மற்றும் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி இரண்டிற்குமே 50 உறுப்பினர்கள் இருந்ததால், வனிதா குப்தா தேர்வாவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதேசமயம் வாக்கெடுப்பு சமனில் முடிந்ததால், வாக்களிப்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸும் செனட் அவையில் இருந்தார்.

 

இந்த வாக்கெடுப்பின்போது வனிதா குப்தாவிற்கு குடியரசுக் கட்சியினர் எதிராக வாக்களித்தாலும், ஒரே ஒரு குடியரசுக் கட்சி உறுப்பினர் வனிதா குப்தாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். இதனையடுத்து வனிதா குப்தாவிற்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து வனிதா குப்தாவை இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கும் பரிந்துரை வெற்றிபெற்றது.

 

இதனையடுத்து வனிதா குப்தா இணை அட்டர்னி ஜெனரலாகப் பதவி ஏற்கவுள்ளார். இந்தப் பதவி அமெரிக்க நீதித் துறையில் மூன்றாவது உயர்ந்த பதவியாகும். மேலும் இந்தப் பதவியேற்பதன் மூலம், இணை அட்டர்னி ஜெனரலாகும் முதல் இந்திய அமெரிக்கர், முதல் பெண் மற்றும் முதல் சிவில் உரிமை வழக்கறிஞர் என்ற வரலாற்றுப் பெருமைகளை அடையவுள்ளார்.