Skip to main content

மணல் கடத்திய நிருபர்... வழக்குப் பதிந்து கெத்துக் காட்டிய போலீஸ்!

Published on 10/11/2019 | Edited on 10/11/2019

நிருபர் எனக் கூறிக் கொண்டே இண்டிகாவில் ஆரம்பித்து போலிரோ பிக் அப் வண்டி வரை தொடர்ச்சியாக மணல் கடத்தலில் ஈடுப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து கெத்துக் காட்டியுள்ளது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

 

 Reporter of sand abduction...


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்துறை துணை சரகத்தின் முக்கியத் தலைவலியே வைகையாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மணல் திருட்டே. காவல்துறை துணைச்சரகத்தில் டி.எஸ்.பி-யாக கார்த்திக்கேயன் பொறுப்பேற்ற பிறகு மணல் திருட்டிற்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்க மணல் திருட்டும் குறைந்து வந்தது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் மானாமதுரை பகுதி நிருபராக பணியாற்றி வருபவர் ராஜசேகரன் மகன் சசிகுமார். பாண்டியன் நகரில் வசித்து வரும் இவர், ஆற்று மணலை மூடையாகக் கட்டி தலைச்சுமையாக சுமந்து, இவருடைய போலிரோ பிக் அப் (TN 63 K 6908) வண்டியில் குவித்து வைப்பதற்காக பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பயன்படுத்தி மணலை திருடி வந்தது காவல்துறைக்கு அரசல் புரசலாக தெரிந்திருக்கின்றது. இத்தகைய வேளையில், இன்று மானாமதுரை தயா நகர் அருகே சிவகங்கை கனிமவளத்துறை அதிகாரிகள் வாகனச்சோதனை நடத்திய போது போலிரோ பிக் அப்வேனில் மணல் கடத்தி வந்த நிருபர் சசிகுமாரை நிறுத்தியுள்ளனர்.

 

 Reporter of sand abduction...

 

முதலில் நான் நிருபர்.. செய்தி போட்டு விடுவேன்.. என மிரட்டிப் பார்த்திருக்கின்றார். அதிகாரிகள் பணியவில்லை என்பது அங்கிருந்து நிருபர் எஸ்கேப்பாக, திருட்டு மணலுடன் போலிரோ பிக் அப் வண்டியை மானாமதுரை சிப்காட் போலீசில் ஒப்படைத்துள்ளனர். இருபிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கெத்துக்காட்டிய காவல்துறை நிருபர் சசிகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவிவருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.