Skip to main content

மீண்டும் தொடங்கியது திருடர்களின் கைவரிசை; வேலூர் மக்கள் அதிர்ச்சி

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
h


6 மாதத்துக்கு முன்பு வரை வேலூர் மாவட்டத்தில் பரவலாக தினமும் 5 கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக வழக்குகள் பதிவாகின. கடந்த சில மாதங்களாக வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் தான் பதிவாகின. இந்நிலையில் தற்போது மீண்டும் வீடுகளில் கைவரிசை காட்ட தொடங்கிவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.


ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் என்கிற கிராமத்தில் அஸ்லாம்பாஷா என்பவர் வீடு உள்ளது. குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்றுக்காக வீட்டை பூட்டிவிட்டு ஆகஸ்ட் 9-ந்தேதி வெளியூர் சென்றுள்ளார். இன்று ஆகஸ்ட் 11ந்தேதி காலை தான் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர். வீட்டை திறந்துக்கொண்டு உள்ளே சென்றபோது ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியாகினர். வீட்டுக்குள் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 23 சவரன் தங்கநகை, 85 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


இதுப்பற்றி அஸ்லாம்பாஷா உடனடியாக உமராபாத் காவல்நிலையத்தில் புகார் தந்தார். புகாரை பெற்ற போலிஸார் சம்பவயிடத்துக்கு வந்து கைரேகைகள் பதிவு செய்துக்கொண்டனர். அதோடு எந்த தன்மையில் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.


கடந்த ஆகஸ்ட் 6ந்தேதி இதைப்போல் வாணியம்பாடி முன்னால் எம்.எல்.ஏ மறைந்த அப்துல்சமத் வீட்டில் இருந்து 50 சவரன் தங்கநகை, 4 லட்சம் பணத்தை திருடிச்சென்றனர். அந்த வழக்கிலும் திருடர்கள் இதுவரை பிடிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களின் வீடுகளாக பார்த்து திருடு போவதைக்கண்டு முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் மீண்டும் திருடர்கள் கைவரிசை தொடங்கிவிட்டதோ என அதிர்ச்சியாகிவுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியலுக்கு வா' என அழைக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் ரஜினி பெயரில் பொங்கல் உதவி வழங்கும் ரஜினி மன்றம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

'நான் அரசியலுக்கு வரவில்லை 'என கடந்த மாதம் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினி அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்மென ரசிகர்களின் ஒருப்பிரிவினர் போராட்டம் நடத்த முடிவு செய்ய, அதனை மன்ற பொறுப்பாளர் சுதாகர் வேண்டாம் என வேண்டுக்கோள் விடுத்தார்.

 

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பு, மன்ற பொறுப்பாளரின் வேண்டுக்கோள் போன்றவற்றை மீறி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்மென அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்த வாரத் தொடக்கத்தில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்துக்கு பின் மீண்டும் இல்லை என உறுதியான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

 

அரசியல் கட்சி தான் கிடையாது, ஆனால் பொதுத்தொண்டு வழக்கம் போல் மன்றத்தின் சார்பில் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். அரசியல் கட்சியில்லை என்றதும் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் சோர்வடைந்த நிலையில், சில மாவட்டங்களில் ரசிகர் மன்றத்தினர் சோர்வடையாமல் தொடர்ந்து சேவைப்பணியை செய்ய துவங்கியுள்ளனர்.

 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு 100-க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு பொங்கல் அரிசி, புடவை, வேட்டி, துண்டு, கரும்பு, இனிப்பு என மாவட்ட தலைவர் சோளிங்கர் ரவி வழங்கினார். இந்த விழா சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடைபெற்ற இந்தவிழாவில் நூற்றுக்கும் அதிகமான பயனாளிகளுடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

 

ரசிகர் மன்றத்தின் ஒருப்பகுதியினர் 'அரசியல் களத்துக்கு வா தலைவா' என அழைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், வேலூர் மாவட்ட ரசிகர் மன்றத்தினர், உங்கள் விருப்பமே எங்கள் விருப்பம் என முடிவு செய்து அரசியலுக்கு வா என அழைக்காமல் வழக்கம் போல், பொங்கல் வாழ்த்து தெரிவிக்கவும், இல்லாத வரிய நிலையில் உள்ள மக்களுக்கு ரஜினி பெயரில் உதவும் பணியை செய்ய துவங்கியுள்ளது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Next Story

டெங்கு கொசு உருவாகி, சிறுமி பலிக்கு காரணமான பள்ளிக்கு 1 லட்சம் அபராதம்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டாவில் உள்ள சிக் ஷா கேந்திரா என்கிற மெட்ரிக் மற்றும் ஐ.சி.எஸ்.ஏ பள்ளியில் வெட்டுவாணம் கிராமத்தை சேர்ந்த நட்சத்திரா என்கிற 4 வயது சிறுமி எல்.கே.ஜி படித்து வந்தார். அந்த மாணவி டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த 15ந்தேதி இறந்தார்.

 

Dengue mosquito breaches to penalty to school'

 

இது தொடர்பாக சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை நடத்திய தனித்தனி விசாரணையில் அந்த குழந்தை படித்த பள்ளியில் இருந்துதான் டெங்கு கொசு உற்பத்தியாகி அது கடித்து அந்த மாணவிக்கு டெங்கு வந்து மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து அந்த பள்ளி சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக குற்றம்சாட்டி, பள்ளிக்கொண்டா பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் தங்களது பகுதியை சுத்தமாக, தூய்மையாக, நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியும், அதனையும் மீறி செயல்பட்டு டெங்கு பரவ காரணமாக இருந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.

 

Dengue mosquito breaches to penalty to school'

 

பொதுசுகாதார சட்டம் 1939ன் படி, திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் அபராதம் செலுத்த வேண்டும், பள்ளி பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ்சும் விடப்பட்டுள்ளது.

பிரபலமான பள்ளி மீது நடவடிக்கை எடுத்துயிருப்பது மற்ற பள்ளி, கல்வி நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.