Skip to main content

மதுரை ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கு விதித்த தடை நீக்கம்

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
ni

 

மதுரை ஆதின மடத்தின் 293- வது ஆதினமாக நித்யானந்தா நியமனத்துக்கு தடைவிதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


மதுரை ஆதீனம் மடம் 2500 ஆண்டு பழமையானது. இந்த மடத்தின் 292-வது குரு மகா சன்னிதானமாக அருணகிரி நாதர் 15.3.1980 முதல் இருந்து வருகிறார். ஆதீனம் மடத்தின் 293-வது ஆதீனமாக பிடுதி நித்தியானந்தா ஆசிரமத்தின் தலைவராக உள்ள நித்யானந்தாவை 2012 ஏப்ரல் மாதம் அருணகிரிநாதர் நியமனம் செய்தார்.

 

இந்நிலையில் நித்யானந்தா நியமனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி ஆதீனம் மடத்தின் பக்தர்கள் மணிவாசகம், சாமி தியாகராஜன் ஆகியோர் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். தடைக்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த மனு 22.12.2014-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா உயர் நீதிமன்ற கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில்  "மதுரை ஆதீனம் மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறநிலையத்துறை சட்டப்படி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறவில்லை. இதனால் கிழமை நீதிமன்றததில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என  தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

''நீங்க வம்ப விலைக்கு வாங்குறீங்க... எடுத்துட்டு போயிருங்க...''-ஆவேசமான மதுரை ஆதீனம்!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

n

 

தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, மனுசாஸ்திரம் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க.வினரும், பல்வேறு இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஆ.ராசாவின் பேச்சு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்தவரிடம் மதுரை ஆதீனம் 'ஆரம்பிச்சுட்டாங்க...' என்று சைலன்ட் மோடில் சொன்னார். 'ஒரு இந்துவாக ஆ.ராசாவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்' என செய்தியாளர் கேள்வியை முடிக்க, அதற்கு பதிலளித்த மதுரை ஆதீனம்,  ''நான் எதும் சொல்றதுக்கில்ல... நீங்க வம்ப விலைக்கு வாங்குறீங்க... டிவி வேண்டாம் டிவி வேண்டாம் நீங்க எடுத்துட்டுபோங்க ( பேட்டி வேண்டாம் என்பதை  டிவி வேண்டாம் என வெளிப்படுத்தினார்) நான் உங்கள கூப்டேனா... எப்படி பேசுறாங்க பாருங்க...'' என ஆதீனம் அங்கிருந்தவர்களிடம் முறையிட்டார். பின்னர் ஆதினம் சார்பில் அங்கு இருந்தவர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் உடனே பேட்டியை முடித்துக்கொண்டு எழுந்து சென்றார் மதுரை ஆதீனம். இதனால் அந்த இடம் சற்று பரபரப்பானது. 

 

 

Next Story

''இந்த நடிகர் படத்தை மட்டும் பார்க்காதீர்கள்... இத சொன்னா சங்கினு சொல்றாங்க''- மதுரை ஆதீனம் பேச்சு!

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

 '' Do not watch only this actor's film ... tell this to Sangin '' - Madurai Aadeenam talk!

 

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை ஆதீனம், ''சமீபத்தில் தொலைக்காட்சியில் படம் ஒன்றை பார்த்தேன். விஜய்னு ஒரு நடிகர் நடிச்ச படம். அதில் அந்த நடிகர் சொல்கிறார் ''புள்ளையாரே... புள்ளையாரே... உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலி ருக்குக்கு சாத்துனா செடி சிரிக்குதுனு' சொல்றாரு. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அப்படி சொல்லுவாரு. அவர் படத்தை பார்க்காதீங்க. இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கினு சொல்கிறார்கள். அடப்பாவிகளா... பாரதி சொன்னார் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன்வந்து பாயுது காதினிலே'. இப்பொழுது பாரதி இருந்திருந்தால் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே' என்று சொல்லியிருப்பார். 

 

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று சொன்னது திருமூல திருமந்திரம். எல்லாம் அண்ணா சொன்னது என்கிறார்கள். பரவாயில்லை திருடி எடுத்துப் போட்டாலும் சந்தோசம். இப்படியெல்லாம் ஆன்மீகத்திலிருந்து திருடிக் கொள்கிறார்கள். திருடிக்கொண்டு திராவிடம் திராவிடம் என பேசிக்கொள்கிறார்கள்'' என விமர்சித்தார்.