Skip to main content

"எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா?" - கூகுள் மேப்பை நம்பி குரூப்-1  எக்ஸாமை தவறவிட்ட மாணவி

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Relying on Google Map Group - 1 A student who missed the exam

 

கூகுள் மேப் பொய் சொல்லாது என நம்பிய கோவை மாணவி, கடைசியில் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதாமல் ஏமாற்றம் அடைந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு கடந்த சனிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. 33 தேர்வு மையங்களில் நடந்த  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு, கோவை பீளமேடு பகுதியிலுள்ள நேஷனல் மாடல் பள்ளியிலும் நடைபெற்றது. இந்த மையத்தில் 45 அறைகளில் 900 தேர்வாளர்கள்  டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத இருந்தனர். 

 

இந்நிலையில், கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், நேஷனல் மாடல் பள்ளியில்  குரூப்-1  தேர்வை எழுதக் கிளம்பியுள்ளார். அப்போது, வடவள்ளி பகுதியிலிருந்து தேர்வு மையத்துக்கு வழி தெரியாத ஐஸ்வர்யா, கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவரது கெட்ட நேரம் நேஷனல் மாடல் பள்ளி அவிநாசி சாலையில் உள்ளது எனத் தவறான முகவரியைக் காண்பித்துள்ளது. இதையடுத்து, அவிநாசி சாலைக்குச் சென்ற ஐஸ்வர்யா, தேர்வு மையம் அங்கில்லை எனத் தெரிந்தவுடன், பதட்டத்தில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளார்.

 

ஒருவழியாக நேஷனல் மாடல் பள்ளியைக் கண்டுபிடித்த ஐஸ்வர்யா, தேர்வு மையத்துக்குள் ஐந்து நிமிடம் தாமதமாக வந்துள்ளார். அவர் 9.05 மணிக்கு வந்ததால்,  குரூப்-1  தேர்வை எழுதுவதற்கு, அங்கிருந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள், தாசில்தாரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, தாசில்தார் அலுவலக அதிகாரிகளிடம் பேசியபோது, தாமதமாக வந்ததால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த  குரூப்-1 தேர்வுக்கு, நான் தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், பள்ளி நிர்வாகம், கூகுள் மேப்பை அப்டேட் செய்யாததால், எனது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மற்ற மையங்களில் தேர்வு எழுத வந்தவர்கள், 9.30 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், தாமதமாக வந்ததால் தான் அனுமதிக்கப்படாதது வருத்தமளிக்கிறது என தேர்வு எழுத வந்த ஐஸ்வர்யா சோகத்துடன் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கர்ப்பமாக்கிய காதலன்; உயிருக்குப் போராடும் மாணவி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
college girl health was affected due to having pregnant

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.