Skip to main content

மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள சமய நூலகம்! (படங்கள்)

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

நூற்றுக்கணக்கான பழமைவாய்ந்த வைணவ நூல்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட சமய நூலகம் - திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை, சட்டமன்ற அறிவிப்பின்படி மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன் அடிப்படையில் நூற்றுக்கணக்கான பழமைவாய்ந்த வைணவ நூல்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று (08.12.2021) கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு பூஜையுடன் மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

 

இந்நூலகத்தில் சங்க காலம் முதல் பல்வேறு ஆச்சாரியார்கள், அறிஞர்கள் எழுதிய மிகப் பழமையான வைணவ நூல்கள் பலவற்றைத் தொகுத்து வைத்துள்ளனர். காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்படும், செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை. இந்நூலகத்திற்கு இந்து சமய நூல்களை  நன்கொடையாக தர நன்கொடையாளர்களும் வரவேற்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.