Skip to main content

“மனித நேயத்தை மதிக்காத எதுவும் ஆன்மிகம் கிடையாது” - சர்ச்சில் கூடிய சமயத் தலைவர்கள்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Religious leaders said There no spirituality without respect for humanity

 

மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத எதுவும் ஆன்மீகமாக இருக்க முடியாது என கோவை சர்ச்சில் சமயத் தலைவர்கள் பேசியது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

கோவை மாவட்டம் பந்தய சாலை அருகே உள்ளது சிஎஸ்ஐ  ஆல் சோல்ஸ் (CSI ALL SOULS) தேவாலயம். இந்த தேவாலயத்தில், சமய நல்லிணக்க நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இதில் பேராயர் வின்சென்ட், குமர குருபர சுவாமிகள், முகமது இஸ்மாயில், ஜெயின் மகாசபை நிர்வாகிகள் உள்ளிட்ட  அனைத்து சமய தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

 

அப்போது, அவர்கள் பேசும்போது ''இந்திய நாட்டில் பல்வேறு மதங்கள், ஜாதிகள், பண்பாட்டுக் கலாச்சாரங்கள், மொழிகள் போன்ற பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். இந்த பன்முகத் தன்மையை உலகில் எந்த நாட்டிலும் நாம் பார்க்க முடியாது.

 

குறிப்பாக நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் தங்களது தனித்துவமான மத நம்பிக்கையில் வழிபடும் உரிமையும் உள்ளது. மேலும், பிற மதத்தவரின் வழிபாட்டு முறையை நிலைநிறுத்துவதற்கான கடமையும் நமக்கு உள்ளது. அன்பும், ஒத்துழைப்பும் நிறைந்த அமைதியான சுற்றுச்சூழல் இந்த நாட்டில் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத எதுவும் ஆன்மீகமாக இருக்க முடியாது. மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு மனிதனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு அவ்வளவு  முக்கியத்துவம் கொண்டது என சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நாட்டில் அமைதியை ஊக்குவிப்பதற்காக வெள்ளை நிற பலூன்களை ஒன்றாக வானத்தில் பறக்கவிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.