Skip to main content

மேகமலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி! ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ வழங்கினார்!!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
 Relief for Tea Plantation workers at Meghamalai Antipathy DMK MLA presented !!

 

கரோனா எதிரொலி மூலம்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஏழை, எளிய மக்கள் மற்றும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கட்சி பொறுப்பாளர்களுக்கு  திமுக  தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.


அதனடிப்படையில், ஆண்டிபட்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜன் கடந்த ஒரு மாத காலமாக தனது தொகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று  ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட, சின்னமனூர் அருகே உள்ள மேகமலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

காலை ஆறு மணிக்கு ஆண்டிபட்டியில் இருந்து புறப்பட்ட எம்.எல்.ஏ மகாராஜன், மேகமலை, ஹைவேவிஸ் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று, காய்கறிகளை வழங்கினார். தொடர்ந்து, மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு, வெண்ணி யார் மகாராஜமெட்டு ஆகிய பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு காய்கறி பையினை வழங்கினார். மேகமலையில் உள்ள ஆயிரத்து 300 தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அந்த பையில் இருந்தன.

குறிப்பாக, முருங்கைக்காய், பீன்ஸ், பல்லாரி வெங்காயம், உருளைக்கிளங்கு, வாழைக்காய் போன்றவை. இவை மட்டுமல்லாமல், குடும்பத்திற்கு இரண்டு பாக்கெட் கோதுமை மாவும் கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருந்தனர் சமூக இடைவெளியை பின்பற்றி, அனைவரது வீடுகளுக்கும் சென்ற எம்.எல்.ஏ மகாராஜன் காய்கறிகளை வழங்கினார்.

இது சம்பந்தமாக மேகமலை மக்கள்  கூறும் போது, அரிசி, பருப்பு எல்லாம் ரேசன் கடைகளில் கிடைக்கிறது. காய்கறிதான் கிடைக்கவே இல்லை. கடந்த மூன்று வாரங்களாக காய்கறிகள் இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தபோதுதான்,  எம்.எல்.ஏ மகாராஜன் வந்து  காய்கறிகள் கட்சி பாகுபாடு இன்றி கொடுத்து உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.

இதில்  கம்பம் ஒன்றிய பொறுப்பாளர் சூர்யா தங்கராஜ், தொமுச தலைவர் செல்லப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, ஹைவேஸ் பேரூர் செயலாளர் மாவட்ட பிரதிநிதி பென்லி, மாவட்ட கவுன்சிலர் மறவபட்டி மகாராஜன், ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து, தமிழன், சிவா, மணி, பால்பாண்டி மற்றும் கட்சி  பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.