Advertisment

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

jallikkattu

நேற்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று காலை தொடங்கிய மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. அதேபோல் திருச்சி மாவட்டம்சூரியூரிலும் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற முடிந்தது. அதேபோல் நாளை மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்தநிலையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதி அறிவித்துள்ளார். பாலமேட்டில் பலியான மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் மற்றும் சூரியூர் ஜல்லிக்கட்டில் பலியான பார்வையாளர் அரவிந்த் ஆகிய இருவரின்குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisment

madurai pongal jallikattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe