Skip to main content

கேள்வித்தாள் வெளியானது அதிர்ச்சியளிக்கிறது... உடனடி நடவடிக்கை எடுத்திடுக!- ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியானது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்திடுக என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 

அதில் "தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்ககம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கேள்வித்தாள்கள் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாவது அதிர்ச்சியளிக்கிறது.

 The release of the questionnaire is shocking  State President of Teachers Union


அரையாண்டுத் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தேர்வுத்துறை இயக்ககம் சார்பில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் 8 மண்டலங்களில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவகங்களுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுத்தேர்வுகளான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. 
 

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தேர்வுக்கு முன் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் சேலம், தூத்துகுடி சிவகங்கை உள்ளிட்ட. சில மாவட்டங்களில் வெளியானது வேதனையளிக்கிறது. அதுவும் சேர் சாட் என்ற இணையதளம் மூலமாக மாநிலம் பரவியுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை சீர்குலைப்பதோடு, இணையதளம் பக்கத்தினைத் தேடி குறுக்கு வழிக்கு தூண்ட செய்கிறது. கடந்த காலங்களில் எப்போதாவது பொதுத்தேர்வில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது உண்டு. ஆனால் தற்போது அரையாண்டுத்தேர்விலே இதுபோன்று நடப்பதால் மாணவர்களின் மனநிலை பாதிப்பதோடு எதிர்காலம் அரசு  தேர்வுத்துறையின் மீது நம்பகத்தன்மை போய்விடுமோ அச்சத்தை ஏற்படுத்துவதால் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் " என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.