'கைதிகளை விடுதலை செய்' – த.மு.மு.க போராட்டம்

'Release prisoners' - tamilnadu muslim munnetra kalagam

கடந்த 10 வருடத்துக்கும் மேலாக எந்த விசாரணையுமின்றி சிறையில் வாழும் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் மொத்தமாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு, விசாரணை நடத்தாமல் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனக்கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

'Release prisoners' - tamilnadu muslim munnetra kalagam

கரோனா காலத்தில் கூட்டம் கூடக்கூடாது, அனுமதி பெறாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் போன்ற காரணங்களை கூறி மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வேன்களில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள மண்டபங்களில் அடைத்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பின்னர் விடுவித்தனர்.

Prisoners release
இதையும் படியுங்கள்
Subscribe