Skip to main content

காதலனை மணந்த பெண்.. வீட்டை சூறையாடிய உறவினர்கள்..!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

The woman who married her boyfriend .. The relatives who looted the house ..!

 

நாகை அருகே காதல் விவகாரத்தில் வீட்டை அடித்து நொறுக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்துள்ளனர் போலீஸார். 

 

நாகை  மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள மடப்புரம் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவீரமணி. இவர் வீட்டில் நாகக்குடையான் பகுதியைச் சேர்ந்த  சுப்பிரமணியன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதேபகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ராஜாத்தி என்கிற பெண்ணை காதலித்திருக்கிறார். 

 

இந்த நிலையில், கடந்த 24ம் தேதி அந்தப்பெண் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணின் தந்தை தனது பெண்ணை காணவில்லை எனத் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான அந்த பெண்ணோ, தான் காதலித்த சுப்பிரமணியனையே திருமணம் செய்து கொண்டேன்; என்னை யாரும் கடத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

 

The woman who married her boyfriend .. The relatives who looted the house ..!

 

இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 10 பேர் ஜோதிவீரமணி என்பவரது வீட்டிற்குச் சென்று, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, வீட்டில் உள்ள சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கி சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதுகுறித்து ஜோதிவீரமணி அளித்த புகாரின் பேரில் வீட்டை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த  பாப்பாத்தி, மகள்கள் கவிதா, புவனேஸ்வரி, மருமகன் செந்தில், முருகுபாண்டி, தங்கமணி, ஜெயலலிதா, ஓம் முருகா, அய்யப்பன், ராஜேஸ்வரி ஆகிய 10 பேர் மீது  திருக்குவளை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஜெயலலிதா (45) மற்றும் அய்யப்பன் (25)  ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 8 பேரையும் தேடி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.