டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாததைக் கண்டித்து அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் தலைமையில், டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம்பெறாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உசிலம்பட்டி தேவர் கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன், வடிவேல், ஆதவன், பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.