Skip to main content

கர்நாடக அரசு நிராகரித்த தரமில்லா சைக்கிளை மாணவர்களுக்கு வழங்கிய தமிழக அரசு!! குழப்பத்தில் மாணவர்கள்!!

Published on 01/12/2018 | Edited on 01/12/2018
 rejected a poor quality bicycle by government of karnataka; Government of Tamil Nadu gave; the Students in confusion !!

 

கர்நாடக அரசால் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்ட சைக்கிள்களை தமிழக அரசால் திண்டிவனத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 

திண்டிவனம், விழுப்புரம் அருகே தழுதாழி என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

 

அப்படி தமிழக அரசு சார்பாக அவர் வழங்கிய சைக்கிளின் முன்கூடையில்  கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டு, கன்னட மொழியில் வாசகம் எழுதப்பட்டிருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

 rejected a poor quality bicycle by government of karnataka; Government of Tamil Nadu gave; the Students in confusion !!

 

கர்நாடகத்திலும் இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு வைத்துள்ளது. அதற்காக கர்நாடக அரசு அவான் என்ற நிறுவனத்தை அணுகி அதற்காக சைக்கிள் உற்பத்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் தரமற்றவை என பரிசோதனைக்கு பின் தெரியவந்ததை அடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க கூடாது. அப்படி வழங்கப்பட்டால் அந்த சைக்கிள்கள் ஒரு வருடத்தில் பழுதடைந்து அரசுக்கு கெட்ட பெயர் வரும் என எண்ணி அந்த சைக்கிள்களை புறக்கணித்துள்ளது.

 

ஆனால் அப்படி கர்நாடக அரசு புறக்கணித்த அந்த அவான் நிறுவன சைக்கிள்களை நிறுவனம் வேறு வழியில்லாமல் தமிழக அரசுக்கு வழங்கிய நிலையில், குறிப்பிட்ட பள்ளியில் அந்த சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. 

 

 rejected a poor quality bicycle by government of karnataka; Government of Tamil Nadu gave; the Students in confusion !!

 

 

 rejected a poor quality bicycle by government of karnataka; Government of Tamil Nadu gave; the Students in confusion !!

 

அந்த நிறுவனத்திடமிருந்து சைக்கிள்களை தயாரித்து பெறவிருப்பதை கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது. அதேபோல் அவான் நிறுவனத்திடமிருந்து சைக்கிள்களை வாங்குவதை நிறுத்த பரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தி வைக்குமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் கர்நாடக கல்வித்துறை செயலாளர் ஷாலினி ரஜினிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் கர்நாடக அரசால் நிராகரிக்கப் பட்ட தரமற்ற சைக்கிள்கள் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது  மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.