வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்திற்கு மத்திய நீர் வள ஆணையம் ரெட் அலர்ட் விடுத்தது அதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெள்ளம் மற்றும் கனமழையில் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களுக்கு உதவும் பேரிடர் சிறப்பு குழுக்கள் அனுப்பப்பட்டன. அதன்படி தூத்துக்குடிக்கும் அந்தக் குழு வந்தது.
பேரிடர் குழுவினர் வெள்ளப் பாதிப்பிற்குட்பட்டவர்ளை மீட்கும் ஒத்திகை கோரம்பள்ளம் பெரிய கண்மாயில் நடைபெற்றது. அதில் அக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சிறப்பு ஒத்திகையை நடத்திக்காட்டினர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா அதனைப் பார்வையிட்ட தோடு அவர்களைப் பாராட்டினார்.