registration department e pass tn government

பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்கனையே இ- பாஸ் ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

Advertisment

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில் பத்திரப் பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ- பாஸ் ஆகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பத்திரப்பதிவுத்துறை டோக்கனையும், பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.