Skip to main content

‘கடன் வேண்டும்மா பதிவு செய்யுங்கள்’ ரூ. 4 கோடி வசூலித்த கம்பெனி!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

‘Register for a loan Company that collected 4 crores!

 

ஏலசீட்டு, தீபாவளி சீட்டு, வான்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என்கிற பெயரில் பொதுமக்களிடம் அதிக வட்டி ஆசைக்காட்டி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுவது ஒருவகையென்றால் மற்றொருபுறம் குறைந்த வட்டிக்கு கடன், தவணைக்கடன், வங்கி கடன் வாங்கித்தருகிறோம் என்கிற பெயரில் மோசடி கும்பல்கள் உலா வருகின்றன.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி பகுதிகளில் மைக்ரோபைனான்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாகக்கூறி ஏழை பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் 1350 ரூபாய் என ஆயிரக் கணக்கானவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளது ஒரு பைனான்ஸ் நிறுவனம்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் என்.பி.எல் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஆம்பூர், உமராபாத், பேரணாம்பட்டு, குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமப்புற மக்களிடம், கடன் தருகிறோம், அதற்கு நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும், காப்பீடு எடுக்க வேண்டும் எனச்சொல்லி ஒவ்வொருவரிடமும் 1350 ரூபாய் பணம் வாங்கியுள்ளார்கள். இதற்காக துத்திப்பட்டில் இருந்த அலுவலகத்துக்கும் கடன் கேட்டவர்களை வரச்சொல்லி பணம் வசூல் செய்துள்ளார்கள்.


இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி காலை கடன் கேட்டு பணம் கட்டியவர்கள் அந்த அலுவலகத்துக்கு வர, அந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருந்துள்ளது. அந்த அலுவலகத்தில் பணியாற்றியதாக கூறியவர்களின் செல்போன் எண்களில் தொடர்புக்கொண்டபோது அதுவும் சுச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்த தகவல் தெரிந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அங்கு வந்து குவிந்துள்ளனர்.

 

காவல்துறைக்கும் இதுக்குறித்த புகார் செல்ல அவர்களும் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். கடன் தருவதாக மட்டும் அட்வான்ஸ் வாங்கவில்லை, ஆர்.டி, பிக்ஸட் டெப்பாசிட், சேமிப்பு போன்றவை மூலமாகவும் பணம் கட்டலாம் எனச்சொல்லியும் பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆம்பூர் பகுதியில் 3.60 கோடி, வாணியம்பாடி 25 லட்சம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி என இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு இப்படி வசூலித்துள்ளார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களின் விசாரணையில்தான், நிறுவனத்தின் உரிமையாளர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்று தெரிவிக்கின்றனர். 

 

ஏமாற்றுபவர்கள் விதவிதமான திட்டங்களோடு பொதுமக்களை நெருங்கிவந்து ஏமாற்றத்தான் செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மக்கள் ஏமாந்துக்கொண்டே இருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.