இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் இயல்பை விட அதிக அளவுபெய்துள்ளதாகமண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை தொடரும். கன்னியாகுமரி, திருச்சி, ஈரோட்டில் வடகிழக்குப் பருவமழை குறைவாகப் பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% அதிகமாக பதிவாகியுள்ளது. 2020-ஆம் ஆண்டில் 946 மி.மீ.க்கு பதிலாக 984 மி.மீ. மழை பதிவானது; இது இயல்பை விட 4% அதிகம். அதேபோல் தென்மேற்குப் பருவமழை 342 மி.மீ.க்கு பதில் 421 மி.மீ. பதிவானது; இது இயல்பை விட 24% அதிகம். வடகிழக்குப் பருவமழை 449.7 மி.மீ.க்கு பதில் 477 மி.மீ. என்று பதிவானது; இது இயல்பை விட 6% அதிகம்" என்றார்.