திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு மண்டல அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
19 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் முதலிரண்டு இடங்களை பிடித்தவர்கள் இந்திய அளவில் நடைபெறும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளத்தகுதி உடையவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.