Skip to main content

தற்காலிக வேலையை பிடுங்கிய வாட்டர வளர்ச்சி அலுவலர்கள்... வழிதெரியாமல் தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

afgse

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எலவாசனூர்கோட்டை. இந்த ஊரில் வசித்து வருபவர் 50 வயது விக்டர் தாமஸ். மாற்றுத்திறனாளியான இவருக்கு தெரசா என்ற மனைவியும் மெர்லின் என்ற பட்டதாரி மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் உட்படப் பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், “உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சில ஆண்டுகளாகக் கணினி பிரிவில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த வேலையிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தன்னை நீக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதனால் வேலைவாய்ப்பு இன்றி குடும்பத்தில் வறுமை ஏற்பட்டு பட்டினி கிடக்கிறோம்.  பட்டம் படித்திருந்தும் அதற்கான வேலை கிடைக்கவில்லை கிடைத்த தற்காலிக வேலையையும் பிடுங்கிக் கொண்டார்கள்.

 

எனவே என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குக் கணினி சம்பந்தமாக உரியவேலை வழங்கி உதவி செய்யுமாறு” அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரது மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு வேலை கிடைப்பதற்கு உதவி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். அதனால் தனது மனைவி, மகளுடன் நேற்று கோவை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு  மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விக்டர் தாமஸ் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். சம்பவம் கேள்விப்பட்டு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விக்டர் தாமசிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து உதவி செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் விக்டர் தாமஸ் தனது மனைவி மகளுடன் புறப்பட்டுச் சென்றார்.

 

ஒரு மாற்றுத்திறனாளி தற்காலிகமாகப் பணி செய்ததையும் பிடுங்கிக்கொண்டு துரத்திவிட்ட உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு மனசாட்சியே இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதுபோன்ற மாற்றுத்திறனாளி குடும்பங்கள் வாழ்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அந்த குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.