Skip to main content

தற்காலிக வேலையை பிடுங்கிய வாட்டர வளர்ச்சி அலுவலர்கள்... வழிதெரியாமல் தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

afgse

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எலவாசனூர்கோட்டை. இந்த ஊரில் வசித்து வருபவர் 50 வயது விக்டர் தாமஸ். மாற்றுத்திறனாளியான இவருக்கு தெரசா என்ற மனைவியும் மெர்லின் என்ற பட்டதாரி மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் உட்படப் பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், “உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சில ஆண்டுகளாகக் கணினி பிரிவில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த வேலையிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தன்னை நீக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதனால் வேலைவாய்ப்பு இன்றி குடும்பத்தில் வறுமை ஏற்பட்டு பட்டினி கிடக்கிறோம்.  பட்டம் படித்திருந்தும் அதற்கான வேலை கிடைக்கவில்லை கிடைத்த தற்காலிக வேலையையும் பிடுங்கிக் கொண்டார்கள்.

 

எனவே என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குக் கணினி சம்பந்தமாக உரியவேலை வழங்கி உதவி செய்யுமாறு” அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரது மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு வேலை கிடைப்பதற்கு உதவி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். அதனால் தனது மனைவி, மகளுடன் நேற்று கோவை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு  மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விக்டர் தாமஸ் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். சம்பவம் கேள்விப்பட்டு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விக்டர் தாமசிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து உதவி செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் விக்டர் தாமஸ் தனது மனைவி மகளுடன் புறப்பட்டுச் சென்றார்.

 

ஒரு மாற்றுத்திறனாளி தற்காலிகமாகப் பணி செய்ததையும் பிடுங்கிக்கொண்டு துரத்திவிட்ட உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு மனசாட்சியே இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதுபோன்ற மாற்றுத்திறனாளி குடும்பங்கள் வாழ்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அந்த குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.