Skip to main content

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்; பிரச்சனைகளை ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிடுவோம்-திமுக பொருளாளர் துரைமுருகன்

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

தி.மு.க.சார்பில் இன்று தமிழகம் முழுக்க நடை பெற்ற கிராமசபை கூட்டத்தை தொடர்ந்து ஈரோட்டில் இன்று லக்காபுரம், கஸ்பா பேட்டை, எலவுமலை ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

 

 

durai murugan

 

கிராமசபையில் ஆண்கள், பெண்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு சாலை வசதி, குடிநீர், மின்சாரம், கழிவு நீர் வசதி மற்றும் முதியோர் உதவித் தொகை என ஏராளமான அத்தியாவசிய பிரச்சனைகளை கூறினார்கள் அதன் பிறகு பேசிய துரைமுருகன். 

 

 

இந்த அரசுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும்  இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இது மக்களுக்கும். அரசுக்கும் நல்லதல்ல. அதிகாரிகள்தான் அரசை வழிநடத்துவார்கள். எனவே இந்த அரசு அதிகாரிகளிடமும்  நிர்வாகத்திற்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த  வேண்டும்" என்றவர் மேலும் 

 

மக்கள் குடிநீர் , முதியோர் உதவித்தொகை , நூலகம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்துள்ளார்கள். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கள் பொதுமக்களிடம் செல்வதில்லை அவர்களின் பிரச்சனைகளை கேட்பதில்லை. தி.மு.க. தலைவர் எங்களிடம் .மக்களை சந்தியுங்கள், குறைகளை கேளுங்கள் , நம்மால் முடியாவிட்டாலும் மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும் என சொன்னார்.. மக்களை சந்திப்பது தான் மகத்தான வெற்றி என்றார்.

 

durai murugan

 

தமிழகத்தில் மிகவிரைவில் ஆட்சிமாற்றம் வரும். அப்போது இந்த பிரச்சனைகளை ஒரு மணி நேரத்தில் நாம் தீர்ந்துவிடுவோம்." என்றார் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் ,"ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து இவ்வளவு பிரச்சினை வரும் என்று தெரிந்துதான் அப்போதே  திமுக தலைவர் தளபதி   மு க ஸ்டாலின் அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறினார் .   

 

 

தமிழகத்தில் சிலை திருட்டு கேடுகெட்ட செயல். கலை உணர்வு மிக்க சிலை திருடு போவது நாட்டிற்கே அவமானம். அதை அதிகாரி பொன்.மாணிக்கவேல் தேடி தேடி கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. நீதிமன்றம் சொல்லிய பிறகும் அமைச்சர் ஒருவர் அவர் யோக்யமானவரா என கேட்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது, சிலை திருட்டைமறைமுகமாக அரசே ஆதரிக்கிறதா என ஐயம் ஏற்படுகிறது.

 

 

ஸ்டெர்லைட் விவகாரம் குழப்பமான நிலையில் உள்ளது. அரசுக்கே இது தொடர்பான தெளிவான நிலை இல்லை. இதுகுறித்து முதலமைச்சரை கேட்டாலும் இதைப் பற்றி தனக்கு  தெரியாது  என கூறுகிறார். இதுபோல கூறுவதற்கு அரசாங்கம் வெட்கப்படுவதாக தெரியவில்லை" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.