Skip to main content

'குளிர்பதன கிடங்கு பணிகள் மூன்று மாதத்தில் நிறைவடையும்'-அமைச்சர் எம்.ஆர்.கே.பேச்சு!

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

'Refrigerating warehouse works will be completed in three months'-Minister MRK speech!

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். 

 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், ''தமிழக முதல்வர் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் அறிவித்து, சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு பணிகள் மூன்று மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும். திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் கண்வலி கிழங்கிற்கு இடைத்தரகர்களால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வந்தனர்.  

 

கண்வலி கிழங்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் யார் என்றே தெரியாமலும், உரிய விலை கிடைக்காமலும் விவசாயிகள் மனவேதனையிலிருந்து வந்தனர். கண்வலி கிழங்கின் விலையை ஒன்றிய அரசே நிர்ணயம் செய்து வருவதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசிடம் தேசிய விற்பனை கூட்டுறவு விற்பனையை இணையம் மூலம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளனர். கண்வலிக் கிழங்கு விதைகளை தமிழகத்தில் கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதல்வரின் சிறப்பான ஆட்சியால் 20 ஆண்டு காலம் இல்லாத சாதனையாக 1.25 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 3.50 லட்சம் மெட்ரிக் டன் நெல்களை பாதுகாக்கும் வகையில் குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சி காலத்தில் ரோட்டில் கிடந்த நெல்களை முதல்வரின் சிறப்பான ஆட்சியால் 15 மாதத்தில் நெல்களை பாதுகாப்பாக வைத்து நல்ல அரிசிகளை பொதுமக்களுக்கு உணவுத்துறை மூலம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.