Skip to main content

ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோக்களுடன் படமாகிறது’ரெட்டி டைரி’!

Published on 20/08/2018 | Edited on 27/08/2018
 


நடிகை ஸ்ரீரெட்டி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ’ரெட்டி டைரி’என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் திரைப்பட பிரபலங்கள் தன்னோடு நெருக்கமாக இருந்த போது ரகசிய கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம்பெறும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் தம்மை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது "ரெட்டி டைரி" என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் படக்குழுவினர்,

தித்தர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் ரவிதேவன், ரங்கீலா எண்டர்பிரைசஸ் சித்திரைச்செல்வன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ’ரெட்டி டைரி’. இப்படம் ஶ்ரீரெட்டியின் வாழ்க்கை போராட்டம் குறித்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே இத்திரைப்படத்திற்கான காட்சிகள் ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகளை படத்திற்காக உபயோகப்படுத்தப்படும் என்று இயக்குநர் அலாவுதீன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரெட்டி,

’ரெட்டி டைரி’ படத்தில் நான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்தில் என்னுடன் திரைப்பட பிரபலங்கள் நெருக்கமாக இருந்த போது ரகசிய கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம்பெறும். ரகசிய கேமிரா மூலம் எடுக்கப்பட்ட இந்த காட்சிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் முறையாக அனுமதி பெறப்படும் என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

''மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஆகாயத்திற்கா செல்லும்..?'' ஸ்ரீரெட்டி விமர்சனம்!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரங்கை  அறிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3ஆம் தேதி நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி மோடியின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சமூகவலைத்தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில்..

 

fdgfd

 

''மே 3ற்கு பிறகு கரோனா வானத்திற்கு செல்லுமா என்ன?? முதலில் ஏழை மக்களைக் காப்பாற்ற நினைத்துப் பாருங்கள்.. குறைந்தபட்சம் உணவுப் பொருட்கள் வாங்கவாவது பணத்தை வழங்குங்கள். ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஒரே ஒரு நபருக்கு பரவி, அது இலட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் பரவினால் என்ன செய்வது..?'' என பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 

Next Story

சேதப்படுத்தப்பட்ட ஸ்ரீரெட்டி கார்! தமன்னா வெப் சீரிஸ் டீம் குறித்து போலீஸில் புகார்...

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தவர் ஸ்ரீரெட்டி. இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தெலுங்கு சினிமாவிலுள்ள பல பிரபலங்கள் பற்றி மீடூ புகாரளித்தார். இதில் சில தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்தும் மீடூ புகாரளித்திருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆந்திராவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

sri reddy

 

 

அண்மையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பதிவில், தமன்னா நடித்து வரும் வெப் தொடர் அவரது வீட்டிற்கு அருகே நடைபெறுவதாகவும் அதனால் பெரும் தொல்லையாக இருக்கிறது. நேரில் போய் அவர்களிடம் பிரச்சனை குறித்து பேச இருப்பதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. “எனது வீடு அருகே ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் ‘பங்களா வீடு’ உள்ளது. இந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சினிமா ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எனது வீட்டு வாசலில் வாகனம் நின்றதால் காரை வெளியே நிறுத்தி விட்டு சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது எனது காரின் 2 பக்க கதவுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் படப்பிடிப்பு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மனோஜ் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காரை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.