செஞ்சிலுவை இயக்கத்தை உருவாக்கிய ஹென்றிடூனட் பிறந்த தினமான மே 8 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக செஞ்சிலுவை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் உள்ள செஞ்சிலுவை இயக்கங்கள் சார்பில் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில், சென்னை, எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர்.