
தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கையான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் காரணமாக எச்சரிக்கை காரணமாக கோவை, நீலகிரிக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வருகின்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் கன அடியில் இருந்த நீர்வரத்து தற்போது ஏழாயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.