Skip to main content

நீலகிரிக்கு தொடரும் 'ரெட் அலர்ட்' -மரம் விழுந்து இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
nilgiris

 

 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது நேற்று பலத்தகாற்று வீசியதால் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாலை மற்றும் வீடுகளின் மீது விழுந்தது. கோக்கால் அருகே இருக்கும் கக்கஞ்ஜி நகர் பகுதியை சேர்ந்த ரவி 52 என்ற தோட்டத்தொழிலாளி நேற்று காலை தோட்டத்துக்கு செல்லும் போது மரம் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்தார். அதேப்போல் பிங்கர்போஸ்ட் ஆர்.சி. காலணியை சேர்ந்த சாதிக் அலி 42 என்பர் மீது மரம் விழுந்ததில் இறந்தார். ஊட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

 

ஊட்டியில் புதுமந்து, தாமஸ் சர்ச், முள்ளிக்கொரை படகு இல்லம், ஸ்டேட் பேங்க் எடக்காடு ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மரங்களை இயந்திரங்கள் மூலம் உடனடியாக அகற்றி அப்புறப்படுத்தினர். எடக்காடு பகுதியில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் மற்றும் இரு தீயணைப்புதுறையிரைுக்கு காயம் ஏற்பட்டது.

 

அரக்கோணத்திலிருந்து வந்த 40 தேசிய மீட்பு படையினர் குந்தா, அவலாஞ்சி, கூடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் நக்சல் தடுப்பு பிரிவினரும் களத்தில் இறங்கியுள்ளனர். கூடலூர் நகராட்சிக்கு தோட்டமூலா பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு உள்ளார். அவர் பயிரிட்டுள்ள 2000 நேந்திரன்  வாழைகள் இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக  இருந்தன. இந்நிலையில் தொடர்ந்து பெய்த  கனமழையால், பலத்த காற்று வீசி ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 390 மி.மீ, அப்பர் பவானி 306,  பந்தலூர் 161 மி.மீ, எமரால்டு 145 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

 

ஏற்கனவே நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தொடர் கனமழை காரணமாக இந்த 'ரெட்அலர்ட்' எச்சரிக்கையானது தொடர்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.