Skip to main content

பரம்பரை வைத்தியம் என்ற பெயரில் ரெட் ஆசிட்... போலி சிகிச்சையால் வீட்டிலேயே முடங்கிய பள்ளி மாணவி! 

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

பரம்பரை வைத்தியர் என்ற போர்வையில் தவறான சிகிச்சையால் பள்ளி மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

 Red Acid in the name of hereditary remedies ... schoolgirl who was paralyzed at home!

 

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்கள் அந்த பகுதியில் நூல் கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். அவருடைய மகளுக்கு சிறிது காலமாக உடலில் தோலில் சில பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு முறைகளில் அவர்கள் சிகிச்சை மேற்கொண்டு அந்த நோயை குணப்படுத்த முயன்றுள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமிக்கு அந்த தோல் நோய்க்காக நீண்ட நாட்களாக மருத்துவம் பார்த்தும் நோய் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.

 

 Red Acid in the name of hereditary remedies ... schoolgirl who was paralyzed at home!


எனவே தெரிந்தவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் விசாரித்து வந்தனர். அப்பொழுது பொள்ளாச்சியை சேர்ந்த பரம்பரை வைத்தியர்  மருகு மகேந்திரன் என்பவரை தொடர்பு கொண்டு தங்கள் மகளின் நிலையை விளக்கி உள்ளனர். அடுத்தநாள் தனபால் வீட்டிற்கு சென்ற வைத்தியர் மருகு மகேந்திரன் தான் பரம்பரை வைத்தியர், என் குடும்பம் பரம்பரை பரம்பரையாக சித்த வைத்தியம் பார்த்து வருகிறது. சிறுமியின் தோல் நோய் பாதிப்பை குணப்படுத்த கொல்லிமலையில் இருந்து வைரத்தை விட அரிதான மூலிகை மருந்து ஒன்றை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

 

 Red Acid in the name of hereditary remedies ... schoolgirl who was paralyzed at home!

 

மேலும் அந்த மருந்தை மாணவியின் தோலில் தடவியுள்ளார். அதன்பிறகு சிகிச்சை அளித்ததற்காக 5,000 ரூபாயை வாங்கிக்கொண்டு மருது மகேந்திரன் சென்றதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களிலேயே சிறுமியின் தோல் தீக்காயம் பட்டதுபோல் வெந்து போனது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் இதற்கு மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆங்கில மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பித்துள்ளனர். அப்போது மாணவி மீது தடவடபட்டது மூலிகை மருந்து அல்ல டைல்ஸ் கற்களுக்கு பூசப்படும் ரெட் ஆசிட் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

 

 Red Acid in the name of hereditary remedies ... schoolgirl who was paralyzed at home!


இதனால் சிறுமியின் தோல் மிகவும் தீக்காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதனை சரி செய்ய இயலாது கட்டுப்படுத்தமட்டுமே முடியும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பரம்பரை வைத்தியர் என்ற பெயரில் மோசடி செய்த மருகு மகேந்திரன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்திய மருத்துவ சட்டத்தின்கீழ் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருகு மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மகேந்திரனை போலீசார் விசாரித்தனர்.

 

 Red Acid in the name of hereditary remedies ... schoolgirl who was paralyzed at home!


அப்போது அந்த மருந்தில் கலந்திருப்பது ரெட் ஆசிட், துஜா, திருநீர், காஸ்டிக் சோடா என்பது தெரியவந்தது. மேலும் இந்த புகாரில் இருந்து தப்பிப்பதற்காக தலைமை காவலர் ஒருவருக்கு நான்காயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் தனது புகழை கெடுக்க சதி நடப்பதாகவும்  மருகு மகேந்திரன் கூறியுள்ளார். தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் நடந்த சோகம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
3 people lost their lives in Kollidam river

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரது மகன்கள் சந்தோஷ்(13), சந்திரன்(10). இருவரும் தங்கள் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகள் சுமார் 10 பேருடன் நேற்று காலை திருமானூர் கொள்ளிடம் ஆற்றிற்குச் சென்று குளித்துள்ளனர். இந்த நிலையில், சிறுவர்களில் சிலர் புதை சூழலில் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற மற்ற சிறுவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 10 சிறுவர்களும் சூழலில் மாட்டிக்கொண்டனர்.

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் 7 பேரைக் காப்பாற்றினர். ஆனால் மூன்று பேரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உடனடியாக அரியலூர் திருவையாறு தீயணைப்புத் துறையினருக்குத்  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியைத் தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் தேடிய பிறகு 3 பேரில் அம்பத்தூரை சேர்ந்த தீபக்(17), தஞ்சாவூரை சேர்ந்த பச்சையப்பன் ஆகிய இருவரின் உடலை மீட்டனர். 

இரவு நேரம் நெருங்கிவிட்டபடியால் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் குழுவினர் இணைந்து மீண்டும் தேடினர். அதில் இன்று காலை மூன்றாவது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த இளம்பிள்ளைகள் கொள்ளிடம் ஆற்றுச்சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.