Skip to main content

திருவாரூரில் பத்து கோடி கேட்டு கடத்தப்பட்ட  ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு 

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
neethi

 

 திருவாரூரில் ரூ10 கோடி கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டார். போலீஸ் வருவதை முன்கூட்டியே தகவலறிந்த கடத்தல்காரர்கள் தலைமறைவாகினர்.

 

திருவாரூரில் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் நீதிமோகன் கடந்த 8 ம் தேதி இருசக்கர வானத்தில் சென்றபோது காரில் வந்த மர்மநபர்கள் கடத்தி சென்றனர். அதன் பின்னர் அவரை விடுவிக்க ரூ10 கோடி கேட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நீதிமோகன் அலுவலகத்தின் உதவியாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட நீதிமோகனை தேடி வந்தனர்.

 

இந்நிலையில் நீதிமோகன் மாத தவனை திட்டத்தில் நிலம் வழங்குவதாக பலரை மோசடி செய்த பல்வேறு வழக்கு அவர் மீது உள்ளது. இதனையடுத்து  போலீசார் பாதிக்கபட்டவர்கள் யாரேனும் கடத்தியிருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மன்னார்குடியை சோ்ந்த வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது போலீசாருக்கு தெரியவந்தது. 

 

இதனையடுத்து வெங்கடாசலம் அளித்த தகவலின் பேரில் உடனடியாக திருவாரூரிலில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று மன்னார்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். இதனிடையே கடத்தல்காரர்களுக்கு போலீசார் இருப்பிடத்தை கண்டுபிடித்து தேடி வருவதை அறிந்து நீதிமோகனை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

அதன் பிறகு கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீதிமோகனை இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.

 

திருவாரூர் அழைத்த வரப்பட்ட நீதிமோகனுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் விசாரணையை தீவிர படுத்த முடியாமல் உள்ளனர்.  

 

 இந்நிலையில் வெங்கடாசலம் மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள அலெக்ஸின் தம்பி ஜான் கென்னடி இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கடத்தல்காரர்கள் 4 பேரை பிடிக்கும் முயற்சியில் தனிபடை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருவாரூரில் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
nee

 

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை காரில்வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். நகர காவல்துறையினர் சிசிடிவிபதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கடத்தல் சம்பவ நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

திருவாரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் நீதிமோகன்.இவர் திருவாரூர் புதுத் தெருவிலிருந்து வடக்குவீதியில் உள்ள தனது கிருஷ்ணா ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு தனது அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் பின்பக்கத்தில் அமர்ந்து சென்ற போது பிடாரி கோயில் தெருவில் காரில் வந்த மர்ம நபர்கள் நீதிமோகனை கடத்தி சென்றுள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த உதவியாளர் ராஜேந்திரன் திருவாரூர் நகர காவல்துறைக்கு உடனடியாக புகார் தொிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மாவட்ட முழுவதும் சோதனை சாவடிகளுக்கு தகவல் தொிவித்தும், கண்காணிப்பு கேமாரக்களை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட நீதி மோகன் மாத தவணையில் நிலம் வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளது.

 

கடந்த 15 தினங்களுக்கு முன்பு தான் நீதிமோகனுக்கு வழங்கப்பட்டிருந்த காவலர் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டிருந்த குறிப்பிடதக்கது. எனவே பாதிக்கபட்டவர்களால் கடத்தப்பட்டார, அல்லது முன்விரோத காரணமாக கடத்தப்பட்டாரா அல்லது கடத்தல் நாடகமா என்பது போன்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டு பலமணி நேரம் ஆனப் பிறகும் எந்த தகவலும் கடத்தல் காரர்களிடமிருந்து வரவில்லை என்பாதால் நீதிமோகன் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.