Skip to main content

மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் சிலை தமிழகம் வந்தது

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

 

pon


தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.

 

இந்தப்புகாரின் அடிப்படையில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் ராஜராஜ சோழன் சிலையும், ராணி லோகமாதேவி சிலையும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.

 

r r c

 

இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.  அப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.

 

 

 

சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்து கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்த 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

மீட்கப்பட்ட சிலைகள்  ரெயில் மூலம் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது.  விரைவில் சிலைகள் தஞ்சைக்கு எடுத்துச் சென்று பெரிய கோவிலில் வைக்கப்பட உள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்து என்பது மதம் அல்ல தேசம்... ராஜ ராஜ சோழன் இந்து தான்” - ஹெச்.ராஜா ஆவேசம்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

"Hindu is not a just religion it is nation.. Raja Raja Cholan is Hindu" - H Raja Avesam

 


“இந்து என்பது மதம் அல்ல. இந்து என்பது தேசம்” என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். 

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டப்படி தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவது பேசுவது கிரிமினல் குற்றமாகும். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக, பயங்கரவாதிகளின் நண்பனாக இருக்கின்ற திருமாவளவன், சீமான் போன்றோர் அறிவித்துள்ள மனிதசங்கிலிக்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்த விரும்புகிறேன். இந்நாட்டின் எதிரிகள் திருமாவளவனும் சீமானும். இதற்கு முழு ஆதாரம் என்னிடம் உள்ளது.  

 

ஸ்டாலின் நல்லவர். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கொம்பு சீவி விடுவார்கள். ஸ்டாலின் தலையை சிலுப்பினால் 1991 ல் நடந்தது இப்பொழுதும் நடக்கலாம். தமிழகத்தின் அரசியல் களத்திலிருந்து சீமான் மற்றும் திருமாவளவனை வேரோடு வேறாக தூக்கி எரியும் வரை நான் ஓயமாட்டேன். 

 

ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றிவிட்டோமா? ராஜ ராஜ சோழன் கட்டிய ரெண்டு சர்ச் ரெண்டு மாஸ்க் எங்க இருக்குனு சொல்லிட்டா போதும். இந்து என்பது மதம் அல்ல. இந்து என்பது தேசம். அதனால் தான் சட்டம் இந்துவை நேர்மறையாகச் சொல்லவில்லை. இந்த மண்ணில் பிறந்த மதங்கள் எல்லாம் இந்து மதங்கள் என்று சொல்கிறது. 

 

இங்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த ஆதிசங்கரர் 72 வழிபாட்டு முறைகளாக இருந்ததை 6 முறைகளாக ஒருங்கிணைத்தார். எனவே சிவன் வேறு சைவம் வேறு இந்து வேறு இல்லை. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. எனவே ராஜ ராஜ சோழன் இந்து தான். இந்தியச் சட்டத்தின் படியும் அவர் இந்து தான் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிசங்கரர் உருவாக்கியதன் படியும் இந்து தான்” எனக் கூறினார்.

Next Story

“எங்கள் பாட்டன் ராச ராச சோழன்... உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” - சீமான்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

“Our கிங் Rasa Rasa Cholan” - Seaman Obsession

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா  நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் எனவும் பேசி இருந்தர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் எங்கள் பாட்டன் ராசராச சோழனை இந்து மன்னன் என பேசுவது வேடிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

சென்னையில் மா.பொ.சி நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு வர்ணாசிரம கோட்பாடு, புரட்சியாளர் அம்பேத்கர், அப்துல்கலாம் போன்றவர்கள் இந்த வர்ணத்தை சார்ந்தவர்கள் என கேட்கும் போது உங்களுக்கெல்லாம் கோவம் வருகிறது. அந்த கோவம் எனக்கும் வருகிறது. ஒரு காலம் வரும் பொழுது அந்த பாடப்புத்தகங்களை நாங்கள் கொளுத்துவோம் என்கிறோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை கொளுத்துவோம் என புரிந்து கொள்கிறார்கள்.

 

உங்கள் பிரதமர் மோடியுடனே நாங்கள் சண்டை இடுகிறோம். அவருக்கு பிரதமராக இருக்கு நாக்பூர் தலைமை பீடத்துடனே நாங்கள் மோதுகிறோம். நீங்கள் எல்லாம் எம்மாத்திரம். அவர் ஒரு பரிதாபம் அவரை விட்டுவிடுவோம். பாஜக விடமும் ஹெச்.ராஜாவின் குடும்பத்தினரிடமும் அன்பாக கேட்டுக்கொள்வது அவரை நல்ல மனநல மருத்துவரிடம் சேருங்கள்.

 

வெற்றிமாறன் சொன்னது உண்மை தானே. ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்த திரைக்கலையை பொதுமைப்படுத்தியது அன்று இருந்த திராவிட இயக்கங்கள் தான். எங்கள் பாட்டன் ராசராச சோழனை இந்து மன்னன் என பேசுவது வேடிக்கை. வள்ளுவருக்கு காவி பூசியது போல் தான்.  உலகத்திற்கே தெரியும் அவர் சைவ மரபு என்பது. பன்னிரு திருமறைகளை காப்பாற்றி தந்தவர் அவர்தான். ராச ராசன் என்பது என் அடையாளம். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” எனக் கூறினார். 

 

செய்தியாளர் சந்திப்பில் ஹெச்.ராஜாவை அநாகரீகமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.