Skip to main content

கேரளாவில் நிகழ்ந்தது தேசிய பேரிடர் இல்லையா...? தேசிய பேரிடர் அறிவிப்பிற்கான காரணங்களும் பலன்களும்

Published on 18/08/2018 | Edited on 18/08/2018

 

நூறு ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேரளா இன்னும் மீண்டு வர முடியாத சூழலில் இருக்கிறது 300க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருக்க கூடிய சூழலில் மத்திய அரசு ஏன் இன்னும் இதனை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்று அனைத்து மட்டத்திலிருந்து தொடர்ந்து கேள்விகள் வரத் தொடங்கியிருக்கிறது.

 

kerala

 

 

 

தமிழகத்தில் மிகவும் பாதிப்புகளை உண்டாக்கிய 2015-ஆம் ஆண்டு வெள்ள பாதிப்புகள் அதன் பின்னர் ஏற்பட்ட ஓகி புயல் பாதிப்புகள் என தென்மாநிலங்களில் பாதிப்புக்குள்ளாகிய இயற்கை பேரிடர்கள் எதையும் தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை.அப்படி இருக்கும்போது தற்போது கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகளையும் மத்திய அரசு இதுவரை தேசிய பேரிடராக அறிவிக்காமல் இருக்கிறது. எதற்காக  வெள்ள பாதிப்புகளை  தேசிய பேரிடராக  அறிவிக்க வேண்டும்  என்ற கேள்வியும் எதன் அடிப்படையில் தேசிய பேரிடர் என்பதை மத்திய அரசு அறிவிக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது அதுகுறித்து வழக்கறிஞரும் பூவுலகின் நண்பர்களின் அமைப்பைச் சார்ந்த வெற்றிச்செல்வன் இடம் கேட்டோம் " தேசிய பேரிடராக அறிவிக்க எந்தவிதமான அடிப்படையும் கிடையாது. எதற்காக தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் என்றால் தேசிய பேரிடர் நிவாரணத் தொகை என்று இருக்கிறது அதைப் உடனடியாக பெறுவதற்குதான். இது மத்திய அரசு செய்யக்கூடிய விஷயம் இதற்கு இந்த அடிப்படை இருக்கிறது என்றெல்லாம் கிடையாது.

 

மத்திய அரசு தனது மதிப்பீட்டின் மூலம் அறிவிக்கக் கூடிய தாகும். அதற்கான குறிப்பிட்ட விதிமுறைகள் என்று எதுவும் கிடையாது. தேசிய பேரிடர் என்பது உடனடியாக அந்த நிவாரணத் தொகை பெற பெறுவதற்காக மட்டுமேயாகும். இதற்கு முந்தைய காலகட்டங்களில் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டது என்பது புயல், நிலநடுக்கம் ,வெள்ள பாதிப்புகள் இவை அனைத்தும் ஒரு சில நாட்களிலேயே முடிவுக்கு வரும். ஆனால் தற்போது கேரளாவில் ஏற்பட்டது போல ஒரு வார காலம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கக்கூடியது இப்போதுதான். இது எல்லாம் புதியதான ஒன்றாகும் இதைப்போன்ற தொடர் பாதிப்புகளுக்கான விஷயங்களுக்குள் அரசு இன்னும் வரவில்லை. அதுதான் மிகப்பெரிய சிக்கலாகும் " என்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.