Advertisment

"கே.சி. வீரமணி வீட்டில் நடக்கும் ரெய்டுக்கு காரணம் இதுதான்" - பகீர் காரணம் கூறிய ஜெயக்குமார்!

ே்ி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குப் பதியப்பட்டு, அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றுவருகிறது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவரும் நிலையில், சோதனை நடைபெறும் இடங்களில் அதிமுகவினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டுவருகிறார்கள். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டபோதும் வேலுமணி ஆதரவாளர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதற்கிடையே இந்த ரெய்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "வேலுர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிமுக தேர்தல் பணி செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. அதிமுக அமைச்சர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு இருக்கிறது. அதற்காக எந்த எல்லைக்கும் இவர்கள் செல்வார்கள்" என்றார்.

Advertisment

kc veeramani raid jeyakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe