Skip to main content

''கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமையக் காரணமே அதிமுகதான்''- செல்லூர் ராஜூ பேச்சு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
"The reason for the construction of Klambakkam bus stand is AIADMK"-Sellur Raju's speech

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதற்கு காரணமாக இருந்தது அதிமுகதான் என  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''இன்று என்.சி.பி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை ஒரு பெரிய அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியதாக 25ஆம் தேதி டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் தேடப்பட்டு வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்திருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமானது.

இந்த கடத்தலில் திமுகவுடைய சென்னை மேற்கு மாவட்ட அலுவலக அணியின் உடைய துணை அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தான் மூளையாக செயல்பட்டதாகவும், அவர்களுடைய சகோதரர் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் இணைந்து இந்த கடத்தலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது என வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது மக்கள் மத்தியில் நாம் விட்டுவிடுகிறோம்.  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நிறைய பேசுகிறார். அதை எல்லாம் எடிட் பண்ணி விடுகிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதற்கு காரணமாக இருந்தது நாம தான். ஆனால் அதிக பேருந்துகள் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உடனடியாக நிறைவேற்றவில்லை. அதற்கான வசதிகளை எல்லாம் செய்த பிறகு தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் இவர்கள் வேக வேகமாக பஸ் நிலையத்தை திறந்து கலைஞருடைய பேருந்து நிலையம் என பெயர் வைக்கிறார்கள். திமுக ஒரு  திராவிட இயக்கத்தின் மாடல் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் எங்கே எடுத்தாலும் மதுரையில் நூலகத்திற்கு கலைஞர் பெயர், ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் என எல்லாவற்றுக்கும் கலைஞர் பெயர் வைக்கிறார்கள். ஏன் அண்ணாவுடைய பெயரை வைக்கலாமா அல்லவா? இந்த அரசாங்கம் செய்ததா?' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.