Skip to main content

கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் மீதான பிரச்சனைக்கு இத்தனை வேகமாக கலெக்டர் நடவடிக்கை எடுத்ததற்கு காரணம்?

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
cb

 

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் உள்ள மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் கேந்திரய வித்யாலயா பள்ளியின் முதல்வராக இருந்தவர் குமார்தாகூர். இவர் அப்பள்ளியில் பயின்ற மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறை, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமார்தாகூரை கைது செய்தது.


பணியிடை நீக்கம் செய்யப்பட்டவரை, தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை நகரத்தில் உள்ள கேந்திரவித்யாலயா பள்ளி முதல்வராக பணி வழங்கியது தென்னிந்திய மத்திய பள்ளிக்கல்வித்துறை.


திருவண்ணாமலையை அடுத்து கணந்தம்பூண்டி என்கிற கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்த தகவல் தாமதமாகத்தான் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. எங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவரை பணியாற்றுவதை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம் என பெற்றோர் சங்க தரப்பில் இருந்து செப்டம்பர் 10ந்தேதி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.


கேந்திர வித்யாலயா பள்ளிக்கு சேர்மன், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தான். இந்த பிரச்சனை எழுந்ததும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, முதல்வராக பணியாற்றும் சுரேஷ்தாக்கூரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி இன்று செப்டம்பர் 11ந்தேதி சம்மந்தப்பட்ட முதல்வர் பள்ளிக்கு வரவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


இந்தியா முழுவதும் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகள் மத்தியரசு ஊழியர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது மத்தியரசு ஊழியர்களின் பிள்ளைகளோடு மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியரல்லாத சில பெற்றோர்களின் பிள்ளைகளும் படிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


வேளாண் மாணவி ஒருவர் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து அதற்கு ஆதாரங்களை தந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ள அதே திருவண்ணாமலையில் தான் கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் மீதான பிரச்சனைக்கு இத்தனை வேகமாக கலெக்டர் நடவடிக்கை எடுத்ததற்கு காரணம், அங்கு படிப்பது அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என்பதால் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.