நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வுபணிகளை மேற்கொள்ளவந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிகளுக்கு சென்ற இடங்களைவிட கோயில்களுக்கே அதிகமாக சென்றார்.
ஆய்வு செய்வதற்காக சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட கவர்னருக்கு நடராஜர் கோயிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் செல்லும் வழியில் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்றார்.
அங்கு நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரால் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தருமபுரம் இளைய ஆதீனம் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்னகும்பம் மரியாதை செய்தனர். பிறகு கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோ பூஜையில் கலந்துகொண்டார். அங்குள்ள விநாயகர், அமிர்தகடேஷ்வரர், அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சாமிதரிசனம் செய்துகொண்டு திருநள்ளார் கோயிலுக்கு காரில் புறப்பட்டார்.
திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலுக்கு சென்றார், அங்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கேசவன் தலைமையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துகொண்டு மீண்டும் காரில் நாகப்பட்டினம் சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 10 மணிக்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பிறகு பொதுமக்களிடம் சுற்றுலா மாளிகையில் இருந்தபடியே மனுக்களை வாங்கிக்கொண்டார். மாலை 5 மணிக்கு வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி சாமிதரிசனம் கண்டார். அங்கு கவர்னருக்கு பேராலயம் சார்பில் மணிமாலை அணிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் கோயிலுக்கு சென்றவருக்கு கோயில் நிர்வாகத்தினர் மங்கலவாத்தியம் முழங்க வரவேற்று, ஆண்டவர் சமாதிக்கு சென்று சிறப்பு பிராத்தனை செய்துகொண்டார். ஆளுனருக்கு கோயிலின் சார்பில் சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.
கவர்னரின் ஆய்வுகுறித்து மாவட்ட ஆட்சியரக அதிகாரி ஒருவர் கூறுகையில்,’’ஆய்வு என்கிற பெயரில் பொதுமக்களையும், பள்ளிக்குழந்தைகளையும் எங்களை போன்ற அரசு அதிகாரிகளையும் அவதிப்பட வைக்கிறாங்க. இன்று அவர் ஆய்வு செய்ததினால் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்துவிட போகுதா?, ஆய்வு என்கிற பெயரில் அவரது வேண்டுதல்களையெல்லாம் பாதுகாப்போடு ஒரே நேரத்தில் நேர்த்தியா நிவர்த்தி செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்க வேண்டிய பள்ளிக் குழந்தைகளை வேகாத வெயிலில் காக்கவைத்ததால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட போகுது எல்லாம் அரசியல் லாபத்திற்காகத்தான்.’’ என்றார் வேதனையுடன்.
இதற்கிடையில் கவர்னரின் வருகையை கண்டித்து திமுக விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்ட முயன்றதால் தள்ளுமுள்ளு நடந்தது. இன்றைய ஆய்வை முடித்துக்கொண்டு ரயில் மூலம் புறப்பட்டார்.
- க.செல்வகுமார்
ஆய்வுக்காக வந்த கவர்னர் கோயில் கோயிலாக சுத்திய மர்மமென்ன?
சார்ந்த செய்திகள்
Next Story
“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!
நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.
Next Story
அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.