Advertisment

'ஆளுநரின் உண்மையான நோக்கம் கேள்விக்குறியாகிறது?'-அமைச்சர் துரைமுருகன் பேச்சு

'The real intention of the governor is being questioned?'- Minister Duraimurugan speech

Advertisment

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்'? என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் 'அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது' என ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த விளக்கம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது. பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Advertisment

rnravi

இந்நிலையில் பேரவை கூட்டத் தொடரில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேரவையில் விளக்கம் அளித்து வருகிறார். ''ண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. 2023 ஆம் ஆண்டிலேயே ஆளுநர் உரையின் சில வார்த்தைகளை புறக்கணித்தார். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றிருக்கிறார். தற்பொழுது ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படாதது தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆளுநர் இதே கருத்தை கோடிட்டு சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்திற்கு அப்போதே பதிலளிக்கப்பட்டது. அவையில் பின்பற்றப்படும் மாண்பு அடிப்படையில் அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் உரையின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படும் என தெளிவாக தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் மீண்டும் இன்றும் அதையே ஒரு பிரச்சினையாக ஆளுநர் குறிப்பிட்டு அவர் அரசு அனுப்பிய உரையை படிக்காமல் சென்று விட்டது அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பதை கேள்விக்குறியாக்குகிறது.

இந்த நாட்டின் மீதும் தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாடு மக்களும் இந்த இந்த பேரவையும் என்றென்றும் கொண்டிருக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டுப் பற்றிலும் தேச தலைவர்கள் மீதும் என்றும் மாறாத நன்மதிப்பை கொண்டது இந்த அரசு'' என தெரிவித்துள்ளார்.

duraimurgan TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe