ADVERTISEMENT
ADVERTISEMENT
அண்மையில் கன்னியாகுமரி எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் தமிழக செயல் தலைவராகவும் இருந்த ஹெச்.வசந்தகுமார் உடல்நலக் குறைவினால் உயிரிழந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தனித்து போட்டியிட்டால்தான், பா.ஜ.கவின் வாக்குவங்கி என்ன என்று தெரிந்துகொள்ள முடியும். பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் பதவி கிடைத்ததால் மகிழ்ச்சி" எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Show comments