Skip to main content

தேனியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுவாக்குப் பதிவு! -கலெக்டர் ஆய்வு!!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடுகபட்டி 197 வது வாக்குச்சாவடியில் தேனி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 


இவ்வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குபதிவை அழிக்காமல் தொடர்ந்து வாக்கு பதிவு நடை பெற்றதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று பதிவான  மொத்தம் ஆண்கள், பெண்கள் உட்பட 1405 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 905 வாக்குகளே பதிவாகின. இதனால் 197 வது வாக்குச் சாவடியில் மீண்டும் மறு வாக்குப் பதிவு நடத்திட தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் அறிக்கை அளித்து கேட்டுக் கொண்டதையடுத்து தேர்தல் ஆணையம் பலரிசீலித்து மறு வாக்குப்பதிவு நடத்த உத்திரவிட்டதையடுத்து தொடர்ந்து இந்த வாக்குச் சாவடிக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மக்கள் வாக்களிக்க வந்து செல்ல வசதியாகவும், அனைவரும் வந்து வாக்களிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலரும், சட்டமன்ற தேர்தல் அலுவலரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் பார்வையிட்டு, பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டதைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி.சண்முகராகேஸ்வரன் உட்பட நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

 Re polling with heavy police protection in Periyakulam Andipatti

 

இந்நிலையில், இன்று  நடைபெறும் 197 வது வாக்குச்சாவடிக்கு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிககும் இயந்திரங்கள் மற்றும் கோளாறு ஏற்பட்டால் உடனே மாற்று இயந்திரமும் பொருத்திக் கொள்ள இயந்திரங்கள் கையிருப்பில் பல்வேறு அரசியல் கட்சியினர் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபார்க்கப்படுவாக்குச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. 

 

 

வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் காவல் துறையினரிடம், வாக்களிக்க வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவும். கழிவறை மற்றும் குடிநீர் வசதிக்ள் போன்ற அத்தியாவசிய தேவைகளைச் செய்திடவும், வாக்காளர்களுக்கு வரி காட்டியாக உதவிடவும், கள்ள வாக்கு பதிய மீண்டும் வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துரை வழங்கினார். 

 

 Re polling with heavy police protection in Periyakulam Andipatti

 

பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். வடுகபட்டியில் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 21 இடங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட (இராணுவ வீரர்கள் ) உட்பட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்ட்டுள்ளனர். 

 

 

மேலும்   வடுகபட்டியில் 197-வது வாக்குச்  சாவடியில்  வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் ஆடியோவுடன் கூடிய 13 கண்காணிப்பு கேமராக்கள் , 13 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.


      

 Re polling with heavy police protection in Periyakulam Andipatti

 

அதுபோல் ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம் கம்மவார் நடுநிலை பள்ளி மற்றும் ஜி.கல்லுப்பட்டி,பிராதுகாரன்பட்டி வாக்கு சாவடிகளில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள். இத்தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாக்கு சாவடிகளை பார்வையிட்டு வாக்கள மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

 

 

அதுபோல் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வும் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பாலசமுத்திரம் மற்றும் வடுகபட்டி வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தும் வருகின்றனர். அதுபோல் போலீசார் பாதுகாப்பும் பலபடத்தப்பட்டு இருப்பதால் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.