Skip to main content

மீண்டும் திறக்கப்பட்ட ரயில்வே கேட்... சுரங்கப்பாதை என்னவானது ?

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் - நியூடவுன் என்கிற இரண்டு பகுதிகளை இணைக்கும் இடத்தில் எல்.சி 81 ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதன் வழியாக தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இரவு – பகல் என சென்று வருவதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

 

Re-opened railway gate ... what's the subway?

 

இதனையடுத்து இரண்டு பகுதி மக்களும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, எம்.பி இருவரிடமும், இந்த ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் இரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அதிமுக எம்.பியான செங்குட்டுவன், எம்.எல்.ஏவும், மந்திரியாகவும் உள்ள நிலோபர் கபில் இருவரும் கண்டுக்கொள்ளவில்லை.

 

சமூக ஆர்வலர்கள் இதுப்பற்றி மத்திய – மாநில அரசுகளின் கவனத்துக்கு புகாராக, கோரிக்கையாக கொண்டு சென்றதன் விளைவாக மத்திய, மாநில அரசுகள் மூலம் சுமார் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க உத்தரவிட்டது. அப்பணிகள் தொடங்குவதற்காக கூறி கடந்த ஆண்டு 2017 செப்டம்பர் 11 ஆம் தேதி ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.

 

Re-opened railway gate ... what's the subway?

 

இதனால் வாகன ஓட்டிகள் நியூடவுன் பகுதிக்கு செல்லவும், வாணியம்பாடி நகரத்திற்குகள் வர கோனாமேடு தரைப்பாலம், புதூர் மேம்பாலம் என சுமார் 4 கி.மீ தூரம் சுற்றி வந்துக்கொண்டு இருந்தனர். இதனால் இவ்வழியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

 

இந்நிலையில் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடி ஒரு ஆண்டிற்கும் மேலாகியும் சுரங்கபாதை அமைக்கும் ஒப்பந்ததாரர் இப்பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 

சமுக ஆர்வலர் மதுரை பாரூக் அஹமத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் மூடப்பட்டதால், பணிகள் நடைபெறாததால் மக்கள் படும் துன்பங்கள் குறித்து மனுதாக்கால் செய்தார். அதி்ல்  மூடப்பட்ட கேட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்ககோரி குறிப்பிட்டுயிருந்தார். இவ்வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இரயில்வே துறை சார்பில் சரியான விளக்கம் தராததால், பொதுமக்கள் அதிகளவு பதிப்புக்குள்ளவதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே கேட் மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தார்.

 

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ரயில்வே அதிகாரிகள் சுரங்கபாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மண்ணால் மூடினர். மேலும் டிசம்பர் 3ந்தேதி மாலை வாணியம்பாடி ரயில் நிலைய அதிகாரிகள் சேகர், பூபதி ஆகியோர் முன்னிலையில் இலகுரக வாகனங்களான கார், ஆட்டோ, பைக் மற்றும் ஆம்புலன்ஸ் மட்டும் சென்று வர கூடிய வகையில் நியூடவுன் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. இனி ரயில்கள் வரும்போது கேட் மூடப்பட்டு மக்கள் காத்திருக்கும் நிலையும் வரும்.

 

சுரங்கபாதை வேலையை வேகமாக தொடங்கி முடிக்க கூறி போராட்டம் நடத்தியிருந்தாலோ, நீதிமன்றத்தை அணுகியிருந்தாலோ ஒரு தீர்வு கிடைத்துயிருக்கும். அதைவிட்டுவிட்டு கேட் திறந்துவிடுங்கள் என கேட்டதன் விளைவு கேட்டை திறந்துவிட்டுவிட்டார்கள், சுரங்கப்பாதை பணி ?, ரயில்கள் போகும்போதுயெல்லாம் மீண்டும் பழையப்படி காத்திருக்க வேண்டியது தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.