Re-curfew if ready for cooperation - Merchant Association decision

Advertisment

தமிழகத்தில் கரோனாபாதிப்பு சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் 360 தெருக்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் 15 நாள் பொது முடக்கத்தை அறிவித்தால் கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை செயலாளரிடம் நேரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்புதலைவர் விக்கிரமராஜா சந்திப்புமேற்கொண்டார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்ததமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னையில் 15 நாள் முழு ஊரடங்கைமுதல்வர் மீண்டும் அறிவித்தால் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறியுள்ளோம் என்றார்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்களும், கோடம்பாக்கத்தில் 73 தெருக்களும், அடுத்தபடியாக திருவிக நகரில் 54 தெருக்களும்தனிமைபடுத்தப்பட்டுள்ளன.