Skip to main content

ஆர்.டி.ஓ விசாரணை... தாமதமாகும் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

RDO investigation ... actress Chitra case

 

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில், முல்லை வேடத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர், சின்னத்திரை நடிகையாகப் புகழ்பெற்றார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், தனியார் ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

RDO investigation ... actress Chitra case

 

தற்பொழுதுவரை மருத்துவமனைக்கு வெளியே, சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சித்ராவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆன நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பதிவுத் திருமணத்திற்குப் பின், இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், இதற்கு வரதட்சணை கொடுமை காரணமாக இருக்குமா என்பது பற்றி விசாரிக்க ஆர்.டி.ஓ லாவண்யா, தற்பொழுது நேரில் வந்துள்ளார். அவர் விசாரித்துக் கையொப்பமிட்ட பிறகே, சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதனால், பிரேதப் பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.