Advertisment

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - தமிழ்நாடு அரசிடம் வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள்

k;

Advertisment

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த சிலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. குடியரசு தினவிழா முடிந்த பிறகு ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை' என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்து, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி தலைமையிலான அதிகாரிகள் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.

reservebank
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe