Skip to main content

“எழுதி வைக்கப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுகிறது”-அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

தமிழக அரசின் சாதனையை விளக்கும் விதமாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தொடர் ஜோதி நடைபயணம் ஐந்தாம் நாளாக இன்று நடைபெற்றது.
 

rb

 

 

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்பு யாரால் நிறுத்தப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும். பாட்டு எழுதி பெயர் வாங்குபவர்கள் இருக்கின்றனர். அதில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். ஸ்டாலினை பார்த்தால் பாட்டெழுதி பெயர் வாங்குபவராக தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து அதன் மூலமாக பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது தெரிந்த விஷயம் தான். எழுதி வைக்கப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுகிறது. திமுகவில் இருப்பது மன்னராட்சி. அதிமுகவில் இருப்பது ஜனநாயக ஆட்சி” என்று தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கீடு!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Vice President of Opposition seat R.P. Reservation for Udayakumar
கோப்புப்படம்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (12.02.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 2 வது நாளான நேற்று (13.02.2024) மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க.செல்வம், வடிவேலு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக  4 முறை சபாநாயகரை சந்தித்தும், பல முறை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்தும் கடிதங்களை வழங்கி இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபுப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகே அமைக்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க.விற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி. உதயகுமாருக்கு சபையில் இடம் ஒதுக்கி தருவது குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு சபாநாயகர் அப்பாவும், இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகருக்கு உரிய உரிமை என்று கூறி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பல முறை கோரிக்கை விடுத்து வருகிறார். ஏற்கெனவே சட்டப்பேரவையில் தலைவராக இருந்த தனபால் இருக்கை விவகாரத்தில் என்ன தீர்ப்பு அளித்தாரோ அதனைச் சுட்டிக்காட்டி சபாநாயகர் அப்பாவு பதில் சொல்லி வருகிறார். இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை வைத்துள்ள, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சபாநாயகரை உரிமையுடன் கேட்டுகொள்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, “எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Vice President of Opposition seat R.P. Reservation for Udayakumar

இந்நிலையில் முதல்வரின் கோரிக்கையையடுத்து இது குறித்து சபநாயகர் அப்பாவு மறு பரிசீலனை செய்தார். அதன்படி எடப்பாடி பழனிசாமி அருகே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி அருகே அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டு 2 வது வரிசையில் முன்னாள் சபநாயகர் தனபால் இருக்கைக்கு அருகே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எதிரிகள், துரோகிகளுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை” - ஆர்.பி.உதயகுமார்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

RB Udayakumar says There is no place for enemies and traitors in ADMK

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது.

 

இதனால் அதிமுகவின் கொடிகள், சின்னங்களை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஓபிஎஸ் கொடி மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி வருவதாக எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் நேற்று (08-11-23) விசாரணையானது நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறை தான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிவையற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். 

 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அதிமுக பொதுக் குழுவில் நீக்கப்பட்டவர்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பூனை கண்களைக் மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பதை போலவே ஓ.பி.எஸ் செயல்பட்டார். 

 

தொடர்ந்து, கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்தி வந்ததால் மக்கள் குழப்பம் அடைந்திருந்தனர். தற்போது உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பால் மக்களுக்கு தெளிவான பாதை தெரிந்துவிட்டது. அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் இணைய அதிமுக வின் கதவு திறந்து இருக்கும். ஆனால், எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுகவில் இணைவதற்கான கதவு மூடப்பட்டுள்ளது” என்று கூறினார்.