ration shops peoples not followed the social distancing

கரோனா பரவலைத் தடுப்பதற்கு ‘சமூக இடைவெளி மிக அவசியம்’ என்று தளர்வில்லா ஊரடங்கை அறிவித்து அரசுத் தரப்பு வலியுறுத்தியபடியே உள்ளது. ஒருசிலர் கடைப்பிடித்தாலும், பலரும் கரோனா குறித்த விழிப்புணர்வு என்பதே இல்லாமல், அரசின் அறிவுறுத்தலை ஏனோ கண்டுகொள்வதில்லை. இந்த அலட்சியத்தை, தமிழக அரசின் ரேசன் கடைகளிலேயே பார்க்க முடிகிறது. இத்தனைக்கும், மக்கள் தனித்தனியாக இடைவெளிவிட்டு நிற்பதற்காக, ரேசன் கடை ஊழியர்கள் வட்டம் போட்டுள்ளனர். ஆனாலும், ஒரு வட்டத்தில் எத்தனை பேர் நிற்பது என்பதில் கடும் போட்டியே நிலவுகிறது.

Advertisment

ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தின்போது, பொருட்களை வாங்கும் மக்கள், சமூக இடைவெளிவிட்டு வரிசையாக நிற்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.