Skip to main content

கள்ளச்சந்தையில் ரேசன் அரிசி... புரோக்கர்கள், கடத்தல்காரர்கள் கைது

Published on 10/09/2019 | Edited on 11/09/2019

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், குட்டூர் காலனியைச் சேர்ந்த முனியன் மகன் சுப்பிரமணி வீட்டின் முன் வாசலில் இருந்த டாடா சுமோ காரை, கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியர் எம்.இளங்கோ சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளார். 
 

அப்போது அந்த காரில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் இருந்துள்ளார். அவரை விசாரித்தபோது, காரில் தலா 50 கிலோ எடை கொண்ட 29 மூட்டைகள் ரேசன் அரிசி இருப்பதாக தெரிவித்துள்ளார். காரில் உள்ளே பார்த்தபோது, அவை பொது விநியோக திட்ட பச்சரிசி மொத்தம் 1400 கிலோ கோழித்தீவனப் பைகளில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளார் எம்.இளங்கோ. 

 

rice


இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் பிரதீப் வி பிலிப் உத்தரவுபடி, சென்னை மண்டல காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் அறிவுரையின்பேரில் கோவை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் நேரடி மேற்பார்வையில் கிருஷ்ணகிரி ஆய்வாளர், டிரைவர் பிரபுவை கைது செய்தனர். 
 

பிரபுவிடம் நடத்திய விசாரணையில், பச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அச்சுதன், பிரபு ஆகியோர்கள் சொன்னதன் பேரில்தான் கிருஷ்ணகிரி குட்டூர் காலனியில் வசிக்கும் சுப்ரமணி என்பவரது ஊரில் உள்ள ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அச்சுதன், சபரிநாதன், வெங்கடேசன், அனுமுத்து மற்றும் கவியரசு ஆகியோர் மூலமாக அச்சுதனனுக்கு சொந்தமான டாடா சுமோவில் ஏற்றப்பட்டுள்ளது. அந்த காரை சாமுடி என்பவர் ஓட்ட அச்சுதன், அச்சுதன் அண்ணன் மகன் ராகுல் என்கிற பிரபாகரன் ஆகியோருடன் குட்டூர் காலனிக்கு சென்று அங்கு சுப்ரமணி வீட்டிற்கு முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 
 

மேலும், அச்சுதன் மற்றும் பிரபு ஆகியோர் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிட்டா என்பவர் மூலமாக அதிக விலைக்கு விற்று வருவதும் தெரிய வந்தது. அச்சுதன் கடந்த 29.08.2019 அன்று வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள சுப்ரமணி, பிரபு, வெங்கடேசன், சபரிநாதன், கவியரச, அனுமுத்து, ரவி ஆகியோர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
 

இதேபோல் கோவை பொள்ளாச்சி மீனாட்சிபுரம் மெயின்ரோட்டில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏற்கனவே அரிசி கடத்தலில் தொடர்புடைய ஆனைமலையை சேர்ந்த மொய்தீன் குட்டி என்பவரது மகன் இப்ராகிம் என்பவர் பிடிபட்டார். அவர் வந்த இருசக்கர வாகனத்தில் 150 கிலோ ரேசன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
 

மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தீபக், தௌபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது