ration card token pongal festival peoples tn govt

Advertisment

ரேஷன் அட்டைக்காரர்கள் ரூபாய் 2,500, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று (26/12/2020) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை இன்று (26/12/2020) முதல் டிசம்பர் 30- ஆம் தேதி வரை வீடு தேடி சென்று ரேஷன் ஊழியர்கள் விநியோகிக்க உள்ளனர். ஜனவரி 4- ஆம் தேதி முதல் ஜனவரி 12- ஆம் தேதி வரை ரூபாய் 2,500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பை ரேஷன் அட்டைத்தாரர்கள் பெறலாம். தமிழகத்தில் சுமார் 2.10 கோடி ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, நல்ல துணிப்பையுடன், 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காயும் தரப்படும். வாங்காமல் விடுபட்டவர்கள் ஜனவரி 13- ஆம் தேதி பொங்கல் பரிசுத்தொகையுடன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.