Skip to main content

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்திற்குள் வந்தது ரத யாத்திரை!

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
yatra


கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழக எல்லைக்குள் வந்தது விஸ்வ இந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத யாத்திரை செல்லும் வழி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து 6 மாநிலங்களைக் கடந்து ராமேஸ்வரம் வரை ராமராஜ்ய ரதயாத்திரை நடைபெறுகிறது. கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு பகுதிகளின் வழியாக இன்று தமிழக எல்லைக்குள் வந்தது.

முன்னதாக, தமிழகத்திற்கு வருகைதரும் ரதயாத்திரையை மறிக்கப் போவதாக சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அறிவித்ததையடுத்தது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெல்லை மாவட்டத்தில் வருகிற 23ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, ரதயாத்திரையை எதிர்த்து போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதேபோல், ரதயாத்திரையை எதிர்த்து போராட்டத்திற்கு செல்ல முயன்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பெரியார் திராவிடர் கழக நிறுவனர் ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால், செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ரதயாத்திரை அமைதியாகவும் எழுச்சியுடனும் முடிவடைந்தது... -ஹெச்.ராஜா

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
h.raja

 

தமிழகத்தில் ரதயாத்திரை நடந்து முடிந்தது குறித்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். 

அந்த ட்விட்டில் அவர், "தமிழகத்தில் ராம ராஜ்ய ரதயாத்திரை மிகப்பெரிய மக்கள் ஆதரவுடன் அமைதியாகவும் எழுச்சியுடனும் முடிவடைந்தது. ஒரு காவல்துறை உயர் அதிகாரி 2.5 லட்சம் பேர் பங்கு பெற்றனர் என்று கூறினார். பதட்டமே சட்டமன்றத்தில் திமுக மற்றும் இந்து விரோத சக்திகள் உருவாக்கியது தான்". இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

Next Story

ராம ராஜ்ய ரத யாத்திரை: இருசக்கர வாகனங்களில் சென்ற 300 பேர் மீது வழக்குப்பதிவு!

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
ratha yatra


ராம ராஜ்ய ரத யாத்திரையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதாக 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய ராம ராஜ்ய ரத யாத்திரை நாடு முழுவதும் 6,000 கி.மீ தொலைவு பயணம் செய்ய திட்டமிட்டது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களைக் கடந்து, கேரளாவிலிருந்து புனலூர் வழியாக தமிழகத்திற்கு வருவதாக இருந்தது.

ஆனால் ரத யாத்திரை தமிழகம் வருவதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. இதனால், பாதுகாப்பு கருதி நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரத யாத்திரை கடந்த 20ம் தேதி தமிழகம் வந்தடைந்தது.

கேரளாவிலிருந்து புனலூர் வழியாக செங்கோட்டை வந்த ரத யாத்திரை அங்கிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்தது. இதையடுத்து, ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு நேற்றிரவு வந்த ரதம், இன்று காலை தக்கலை, சாமியார்மடம், உண்ணாமலைக்கடை, குழித்துறை வழியாக திருவனந்தபுரம் சென்றது.

இந்நிலையில், 144 தடை உத்தரவு இருந்த நிலையில் செங்கோட்டை, தென்காசிக்குள் ரதம் வரும்போது ரதத்தின் முன்னும் பின்னும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களால் இடையூறு ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களில் மீது செங்கோட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.