Skip to main content

குழந்தை தத்தெடுப்பு சட்ட விதிகளை எளிமையாக்க வேண்டும் - ஈஸ்வரன் வேண்டுகோள்

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

 


குழந்தைகளை தத்தெடுக்க கடைபிடிக்கப்படும் கடுமையான சட்ட நடைமுறைகளை தளர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். குழந்தைகள் விற்பனையை தடுக்க வேறு வழி கிடையாது என கூறிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மேலும் கூறும்போது,  "இராசிபுரத்தில் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி 30 ஆண்டுகாலமாக பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக பேசிய ஆடியோ வெளியாகி கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து காவல்துறை கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

 

c

 

குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளதால் இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட கும்பல் ஏழை குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை குறிபார்த்து கடத்தி குழந்தையில்லா தம்பதியினரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு அந்த பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்திருக்கிறார்கள். 


வியாபாரிகள் பொருட்களின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்வதை போல, இந்த கும்பல் ஆண், பெண் குழந்தைகளை நிறம் மற்றும் எடை வாரியாக விலை நிர்ணயித்து விற்பனை செய்திருப்பது தமிழக மக்கள் மனதில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த கும்பல் குழந்தைகளை விற்பனை செய்தது மட்டுமல்லாமல் குழந்தைகளை விலைக்கு வாங்கும் பெற்றோர்கள் பெயரிலே பிறப்பு சான்றிதழையும் வாங்கி கொடுத்திருப்பது தமிழக அரசின் பிறப்பு சான்றிதழ்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

 

ஏழை குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை பொருளாதார சுமையினால் வளர்க்க முடியாத பெற்றோர்களும் மற்றும் தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தத்து கொடுக்க முன் வருவதை பார்க்க முடிகிறது. அதேபோல பெற்றோர்களை இழந்து காப்பகத்தில் வளரும் குழந்தைகளை தத்தெடுக்க பலர் முன் வருவதையும் பார்க்க முடிகிறது. குழந்தைகளை தத்தெடுக்க வேண்டுமென்று முடிவெடுக்கும் தம்பதிகள் 45 வயதிற்கும் மேல்தான் முன்வருகிறார்கள். அதற்கு பின்பு சட்டப்படி தத்தெடுக்க வேண்டுமென்றால் 4, 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

 

 அந்த சூழ்நிலையில் தான் விரைவாக தத்தெடுத்து குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது ஒரு வழியில் குழந்தை கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குழந்தையை தத்து கொடுப்பவர்களுக்கும், தத்தெடுப்பவர்களுக்கும் சிரமம் இல்லாமல் எளிமையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் சட்டப்படி நடந்து கொள்ள தான் இரு தரப்பும் விரும்புவார்கள். அப்போது இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாமல் போகும். பச்சிளம் குழந்தைகள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாற்றங்களை கொண்டுவர ஒரு தனி குழுவை அமைத்து தமிழக அரசு ஆராய வேண்டும்." என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.