ராசிபுரம் குழந்தை விற்பனை!!! 11 பேருக்கு காவல் நீட்டிப்பு...

rasipuram child kidnap

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளரான (எப்என்ஏ) அமுதவல்லி, கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்ப, குழந்தை விற்பனை வழக்கில் செவிலியர் அமுதவல்லி உட்பட 11 பேரை கைது செய்தனர்.

இன்று அவர்கள் நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த 11 பேருக்கும் ஜூன் 20 வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டது.

childkidnap Namakkal Rasipuram Amudha Audio rasipuram
இதையும் படியுங்கள்
Subscribe