Skip to main content

'அவன் குழந்தையை என்னால் வளர்க்க முடியாது' - இரண்டாவது கணவனுடன் சேர்ந்து தன் குழந்தையைக் கொலை செய்த தாய்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் வ.ஊ.சி நகர் பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன். இவருக்கும் வாலாஜா பாக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த காவியாவுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர்க்கு 6 வயதில் தருண் என்ற ஆண் குழந்தை இருந்தது.

 

Ranipet incident - Police investigation

 



கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டு கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு காவியா வாலாஜா பாக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தாய் வீட்டில் இருந்த காவியாவுக்கும் ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தியாகுவுக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. 

இதனை அறிந்த தியாகு தயார் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார். இருவரும் வாலாஜாவில் உள்ள பெல்லியப்பா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இரண்டாவது கணவனான தியாகு எவனோ பெற்றப் பிள்ளையை நான் ஏன் வைத்து வளக்க வேண்டும் என்று அந்த குழந்தையைக் கொடுமை படுத்தி உள்ளார். இதற்கும் அந்த குழந்தையின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். 

இதனை அறிந்த காவியாவின் அக்கா அஜந்தா ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் என் தங்கை மகனைக் கொடுமைப்படுத்துகிறாள் அவனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கேட்டு புகார் கொடுத்து உள்ளார். 

இதனை விசாரித்த காவல் ஆய்வாளர் , அந்தக் குழந்தையிடம் கேட்டபோது நான் என் அம்மாவுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளது. தன் மகனை அழைத்து சென்றுள்ளார் காவியா.  சில நாட்களில் அந்த பையன் வீட்டில் இல்லையாம். அக்கம் பக்கத்தினர் குழந்தை எங்கே எனக் கேட்டபோது விடுதியில் சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளார்கள் கணவனும் மனைவியும். 

தற்போது கரோனா பரவலால் குழந்தை வீட்டுக்கு வராமல் இருப்பதைப் பார்த்து சந்தேகமாகி விசாரித்தபோது சரியான பதில் இல்லையாம். இதனால் உறவினர்கள் மீண்டும் புகார் தந்துள்ளனர். விசாரணையில், குழந்தை மீண்டும் வீட்டுக்கு வர கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த தியாகு 13.06.19 அன்று குழந்தையைக் குளிக்க வைப்பதாகக் கூறி இருவரும் தண்ணீர் நிறைந்த ப்ளாஸ்ட்டிக் ட்ரம்மில் அழுத்தி துடிதுடிக்க கொன்று உள்ளனர். அதன் பின் இருவரும் சேர்ந்து ஆற்காடு அருகே உள்ள டெல்லிகேட் பாலாற்றில் யாருக்கும் தெரியாமல் இரவு புதைத்து விட்டு சென்றதாகக் கூறியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து ஆற்காடு வட்டாட்சியர் வத்தட்சலா மற்றும் போலிசார் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அங்கேயே உடற்கூராய்வு முடிந்து மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.